செவ்வாய், 12 ஜனவரி, 2010

சன, சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.


விரட்டு!
ஓட,ஓட விரட்டு!
எங்கள் ஓர்மங்களை,அதன் வேர்வரை,
பிடுங்கி,எம் உறவுகளை உலைத்தவனை,
விரட்டு ஓட,ஓட விரட்டு.

உந்தன் நாட்டை விட்டு மட்டுமல்ல- முடிந்தால்
உலகை விட்டே!
உரசும் உள்ளங்களில் நாளும் கெழிக்கும்,
நஞ்சின் நர்த்தனங்கள் என்றுமே சயனிக்காது.
விஞ்சும் நாளொன்று விடையெறியும்-அதுவரை
எஞ்சி நிற்கும் எம் உறவுகளே!
விரட்டு இந்த விதை விடைத்தவனை,
ஓட,ஓட விரட்ட உமக்கு கிடைத்த-
ஓலை எழுதும் இந்த ஓர்ப்பினால் விரட்டு.

மற்றவனை நாம் மன்றத்தால்,
மருவும் ஓர் வலைப் பின்னலில்,
உருவி ஒட்டி ஒரு வகை பண்ணுவோம்.இப்போது
உடனடித் தேவை உலையன் மகிந்தாவை,
உரிந்து அவன் உடமைகளை உறுப்பாய் உருவி,
வரிந்து வகையற்ற வக்கணை வகுத்து,
விரட்டு அவனை விரட்டு!

கால,காலமாய் தமிழனை ஏமாற்றும் இந்த-
பேரினவாதியின் பேச்சை மறுத்து,ஊரினை விட்டே,
ஒரேயடியாய் விரட்டு.
ஈழத் தமிழனே!
இப்போது கிடைத்த இந்த சந்தர்ப்பம்-
இனியும் உன் வாழ்வில் இலங்கவே மாட்டாது.எனவே
சிந்தனை ஒன்று உனக்கு உவகையாய் சீண்டும் இந்த-
சீலாக்கியத்தை சிறப்பாய் சிரத்து.

அதற்காக பொன்சேகாவை போற்றென்று-
அர்த்தமற்று அர்த்தம் கொள்ளாதே-காலத்திற்கு ஏற்ப
சாதகமாய் சில சந்தர்ப்பங்களை சரக்கேற்ற வேண்டும்.
பூதாகரமாய் இந்த புலையன் புவி கொள்ள பூண்டிருக்கும்-இந்த
மீதாரத்தை மிகையாய் மிளிர்வகற்று.

அன்றேல்!
சனநாயகம் அந்தோ பரிதாபமாய்-
சன,சந்தடியற்று சாக்கோலமே சாகுபடி.
ஆதலால்!
எம் அன்பான ஆற்றல் மிகு என் இனமே!
ஆவன செய்வாயென ஆதங்கமாய் நாம் இங்கே.

மாற்றம் இல்லாதது மாற்றம் ஒன்றுதான்.
தேற்றம் இதுதான் தேய்வில்லை தேம்பி அழுதல்
மார்க்கமும் இல்லை,மாயவனை தொழுதலும் தோற்றம் இல்லை.
துர்க்கனை இந்த துருப்புச் சீட்டாம் உன் வாக்குச் சீட்டால்-
வகுந்தெடுத்து வாகையை மாற்று.
இப்போதைய,தற்போதைய தேவையான மாற்றம்.
மகிந்தாவை மனைக்கு மட்டுமல்ல விதைத்த
வினைக்கு வினையாற்ற! மறவாதே எம் மானிட தமிழரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்