வியாழன், 8 ஏப்ரல், 2010

நெருப்பாற்றில் மலர்ந்த தீ-மா வீரத்தால் வளர்ந்த தீ


போகும் வழி போகின்றோம்-
போர் சுமந்து செல்கின்றோம்
சாகும் வரை நாம் தொடர்வோம்.எங்கள்
சாசனங்கள் நிறையும் வரை,

ஆவி வழி சொந்தங்கள்
ஆயிரங்கள் இழந்தாலும்
மீதி எழும் பந்தங்கள்-வீதி
கீற விழுமியங்கள்.

ஊர் அழிந்து போனாலும்
உறவழிந்து போனாலும்
உறுதியாகிப் போகின்றோம்-எங்கள்
உறுதி எழுதப் போகின்றோம்.

இலட்சியங்கள் சாவதில்லை-எங்களை
இழைத்தவர்கள் ஓய்ந்ததில்லை
வறட்சி ஒன்றும் வரைவதில்லை-இந்த
புரட்சி என்றும் புரள்வதில்லை.

நெருப்பாற்றில் மலர்ந்த தீ-"மா" வீரத்தால்
வளர்ந்த தீ
விருப்பாற்றி எரிந்த தீ-புலி வீரர்களால்
மலர்த்திய தீ
சுதந்திர தீபம் ஏந்தாமல் சுரம் குன்றி
குமைந்திடுமா?
சுந்தரத் தீ மழுங்க சுரைந்திடுமா?

மங்காத ஒளி வீசும்-அது
மாவீரம் காத்திருக்கும்
ஓங்காமல் ஓயாது ஒளி தீபம் ஏற்றாமல்
மாமாங்கம் போனாலும் மலராமல் போகாது.எங்கள்
மண் விடுதலை கீதம் இசைத்தேகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்