சனி, 29 மே, 2010

காலமது நொடித்திருக்க காயம் மாறும்.


நான்!
காத்திருப்பேன் ஒரு கதை படிக்க,
காலமது நொடித்திருக்க காயம் மாறும்
காலம் காத்திருப்பேன்.

கோலம்
அது கோடிட்ட கோலங்கள் கோர்வைகள்
...மடிந்திருக்க,-
நான்
யாத்திருப்பேன் அதன் யதி,
அணை தரும்
சுதி, லயம்
லாயிக்கும் லயங்களில் லாவண்யம் பூத்திருக்க.

நான்
வேர்த்திருப்பேன் அந்த வேதனை தந்த ரணம்
இதில் வேடிக்கை மனிதங்கள் கோடிட்ட
கொய்யங்கள்,
கொத்தடிமைகள்,
கொடுமைகள்
அவை யாவும் அரண் மீட்கும்
உரிமங்கள் உயர்வாகும்.

நாம்
பூத்திருப்போம்-புவி வாழ்வில்
புனருத்தாரணங்கள் புடம் சூட
மனுதாரங்கள் மதிப்பளிக்க -நாம்
மகிழ்ந்திருப்போம்.
எங்கள் கொற்றங்கள் அன்று
கொலுவீற்றிருக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்