சனி, 15 மே, 2010

கோவணமும் ஆவணமின்றி அகலும்.


வித்தகம் சூடியா சிங்கள "வே" மகன்கள்,
எத்தகம் மூடி சிதைத்தார்கள்?
உன் சித்தகத்தில் சிறக்கல்லையா?
பித்தகங்கள் பிறவியாக பிடரி வழி
பிறழ்ந்த சிங்களனவன் பிஞ்சு முதல்-எங்கள்
உறங்கு குழிவரை உயிர்த் தண்ணி பறித்தான்.

பொது மக்களின் புதை குழியில் நாளை இவர்
"மா"?வீரக்குதூகலம் கலக்க -எந்த
"பா" ஏந்தினார்கள்?ஆம்
அரக்க சிந்தையர்கள் கால,காலமாக... களி(ழி)க்கும்,
அனந்த நிலையது அவர்கட்கும் பொருந்தும்.
எந்த போதினி போற்ற பொய்கை கலந்தார்.

எம் இன அவல "சா"க்களில்:இவர்கள்
"சா"க்கடை திறப்பு.நாம் தீக்குளித்து
எரிந்த மேட்டில் சாம்பல் இன்னமும்
கரையவில்லை.
காயவில்லை!
கல,கலக்கின்றான்
சிங்களக் காடையவன்-பேரினவாத
தெருக் களத்தில்.

புலத்து நண்பனே!
என்ன கடனாற்ற நீ கங்கணம் கட்டியுள்ளாய்?
உன் கடனாற்ற!
வழமைபோல்
வேற்று முகம் காட்டி எந்த தோற்றுவாயில்
உன் வரப்பெழுதுவாய்?

இப்பவும் நீ தூங்க நாளை
உன் வீட்டு முற்றம் மட்டுமல்ல-நீ
கட்டியிருக்கும் கோவணமும் ஆவணமின்றி அகலும்.
விழித்திருக்க,
விவேகமாக செயலாற்று.அஃதின்றேல்
உன் முகவரியை மாற்றினாலும்-உன்
பிறப்பதை மாற்றமுடியாது.அது
உன் ஆயுள்வரை வரையறையின்றி
சந்ததி வரை வரப்பிளக்க வழியாகும்.

பசித்திரு!
பாரில் எப்போதும் விழித்தெழு -நாளை
ஊரில் உன் உறுப்பெழுத.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்