சனி, 15 மே, 2010

நினைவழியா நாட்கள் நடுகல் நாட்டும்.


நினைவழியா நாட்கள் நடுகல் நாட்டும்.
நிதம் அதை மனமது சாடும்.
பேரவலச் சாவதை இனமது மறக்குமா?
ஈனச் சாவென்றே மாற்று முகம் சூட்டுமா?
துரோகம் பெருந் துரோகம்,
எங்கள் இன மக்களை இழந்ததை நினைக்கால்
பெருந் துரோகம்.
இதயத்திற்கு மட்டுமல்ல!
இனத்திற்கே இழைக்கும் பெருந் துரோகம்.
ஈனச் சிங்களன் எங்கள் பெரு நிலத்தில்
ஈற்றில் ஈத்தியதை, வகை,தொகையின்றி வதைத்ததை,
எரித்ததை,உழக்கி எம் வயலெரித்ததை,
ஈகச் சுடர்களின் ஈர நிலத்தையும் இன்றும்
இழிவாக கரைத்ததை,
ஊர் கூடி உலகறிய உணர்வால் ஒன்றி,
உரத்து சொல்லாவிடில் பெருந் துரோகம்.
நமக்கு நாமே உந்தும் பெருந் துரோகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்