செவ்வாய், 18 மே, 2010

கரி நாள் இன்று.



வையப் பரப்பில்,அதன் வசந்த செழிப்பில்
வாழ்ந்த இனம்,
வாகையே வகையாய் வயல் மீட்ட வள்ளல்கள்,
தோகை விரித்தாட தோட்டம் அமைத்த தோகையர்கள்,
பாகைகளால் பருதி பருத்து பரவி,விரவியிருந்த
பரிவுகள் எல்லாம் பாவிகளால்,
பறி்தெடுக்கப்பட்ட,
கரி நாள் இன்று.

மாற்றம் அதற்கு மட்டும்தான் மாற்றம் மையல் விரிக்காது.
ஆனால்!
மாற்றம்!
சுழலும் இந்த பூமிப் பந்து
சுமந்து வரும்....
நாள் ஒன்று நயக்கும்.
நலிந்து கொய்யப்பட்ட எங்கள் தோட்டம்-
நயப்பெழுதி நயனம் நயக்கும்.

ஈகத்தார்க்கு இரப்பெழுதும் மனம்,
இகத்தில் இதயத்தில் மட்டுமே எழுதட்டும்.
சொல்லிற்கு முன் செயலாக்கும் சேடியர்கள்,
செய்கை நியம் மொய்ய நாம்-
பொய்கை பொலிவுற போற்றும் எம் வழி செல்வோம்.

நேற்றைய போலவே பொழுது மட்டுமே விடியும்,
நாம் பொருதும் போக்கில் மாற்றம் மருவ,
பொலிவுற ஓா்மம் ஓங்க உலகொழுங்கு மாறும்.
விதைத்த உடன் எதுவும் அறுவடையாகாது.நாம்
விரிந்திருந்தால் வினைகள் விடையிறுக்காமல் ஓயாது.

நீதிக்கு தண்டனையை எந்த நிர்மலன் தொகுப்பான்?
போதித்த புத்தனின் பொய்மையில் உலவ?
சாதிக்கும் சரித்திரம் தர்மம் நிலை நாட்டும்.
பாதித்த எங்கள் பரப்பெழுதி ஊட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்