சனி, 5 ஜூன், 2010

ஆயுத எழுத்தாக எழுத்தாணியை ஏற்றவனே!


பூத்திருந்தாய் எங்கள் புவனத்தில்,
புனித விடுதலை ஒன்றையே யாத்திருந்தாய்.
புத்த நித்தியம் எங்களிற்கு விதைத்த-
சித்த வைத்தியத்தையே சீர்-
தூக்கியிருந்தாய்.

அதனால்!
அவர்தம் ஆயிலியங்களை களைய,
தூக்கினாய் கருவி-அது
எம்!
ஆயுத எழுத்தாக,
அதையே விடுதலை-
எழுத்தாணியாய் ஏற்றவனே!
பாயும் பொழுதிற்காய் உன்னையே பதித்திருந்தாய்.
சாயும் நிலை வரினும் சிங்களன் கையில்
சாயாத கலையல்லவோ காத்திரமாய்-
உன்-
காயாத கனவது.

புறச்சூழல் உனை புரியாத பொழுதாய்,
உறவுகள் உனை அரவணைக்கா கணமாய்,
உன் கண்ணியமான,கடப்பாடு,
திண்மையான செயற்பாடு,
உண்மையான யோகமாக உணரும் பொழுதில்!

நீ!
சத்திய வேள்வியாய்
தமிழீழ மண்ணில் சாவால் சரித்திரம் எழுதி.
புண்ணியனே!
பிறப்புக்களின்
அர்த்தம் ஆரத் தழுவிய வித்தியனே!
விடியும் ஒவ்வொரு கணமும்,
உன் வீரம் சாற்றும் விகற்பத்தில்,
எம் விழி(ளி)ப்புக்கள் உமைத் தழுவும்.

சூழல்!
இன்று சூனியமாய் வரம்பு அள்ளியதாய்,
ஓரு பார்வை அவ்வளவே!
குருதிகள் சிந்தாத குதம் ஏதும் உண்டோ?
இது!
விடுதலை வேள்வி.இதில்
ஆகுதிகள் சாதாரணமான ரணம் சரிக்கா,
எல்லாமே!
இங்க அசாதாரண ஆயிலியம்
இத்தனையும் சுதந்திரம் விடுதலை என்ற பெருங்கனவின்-
இடுகுறி.

ஆம்:
சொல்லணத் துயரம் எம்
பூமிக்கு மட்டும் இல்லை எங்களின்
புதல்வர்களினதும்,
புனிதர்களும் மாவீரக் கனவெழுதும்.

எங்கள்-
தாயகத்தை சிதைத்து,
பிச்சு உதறி,சகலதுவும் பிணக்காடாய்!
வார்த்தைகளிற்குள் அடங்காத அட்டகாசம் அது.
மனிதம் தின்ற கோரத்தின் அரிச்சுவடியது.

இன்றும் அதன் தாரணங்கள் சூடிய வடுக்கள்
அனு தினமும் உள்ளம் அரித்து வெளிவரும்.

ஆயினும்!
புனிதனே உன் பாதம் ஆர்ந்து,அகோரணமாய்
உறுதி பூண்டோம்.
மலரும் தமிழீழத்திற்காய் நாம் மடி சுரப்போம்.
அந்த மகோன்னதம் மிளிரும்.
அரூவமான ஆத்தமங்கள் விழி விரிக்கும்.
விடியும் திசை எம்பால் ஒளிர,
உன் சத்திய வேள்வியின் வழியில்-
எம் வாசல் பூப் பூக்கும்.

சுதந்திரம்,
விடியல்,
எந்த இரத்த வடுவின்றியும்-
விடியாது.
விழி விரித்து,வழி பார்க்கும் பக்குவம் விகற்போம்.
வீழ்ந்தது எழுவதற்கே!
வேதம் படித்தோம்.
பாரில் உன் பாதை செழிக்கும்.
செந்தூரமாய் செந் தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்