திங்கள், 22 பிப்ரவரி, 2010

மறக்கக் கூடாத மயானம்.

நடந்து முடிந்ததாக கூறப்படும் அத்தனை அழிவுகளும் நெஞ்சில் அணையாத தீயாக என்றுமே எரியவேண்டும்.மறக்கவோ,மறைக்கவோ முடியாத வெஞ்சினமாய் உள்ளத்தில் அனல் எரிய வேண்டும்.இதை மறந்தால் தமிழன் என்ற தார்மீக எண்ணத்தையும் எரித்து விடு.இந்த இகத்தில் எந்த நுகமும் அற்ற,அறமுமற்ற அனாதியனாய் அலை.தாய் நிலத்தையம்,தர்மத்தின் அறத்தையும் அழித்தவனை எந்த முகாந்திரத்திலும் உன் மனம் கொள்ளாதே.சுழலும் இந்த பூமிப் பந்து மீண்டும் எங்கள் கொற்றத்தை கொலுவேற்ற அயராமல் உழை.இணையங்களில் நாளொரு திரிப்பும், பொழுதொரு பழிப்புமாய் சில,பல சுய நலமிகளால் தொப்பி பிரட்டி தோரணம் வேயும் ஒட்டர்களை,இந்த கூத்தர்களை பிரித்தறிந்து கொள்ள இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொண்டு உனதான தேசியத்திற்கு தோள் கொடு.நாளை விடியலின் சந்நிதியில் எம் அவலங்கள் முடிவு முகரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்