ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

வார்த்தைகளிற்குள் வசப்படாத வாகையது.


இளமையின் கனவுகள் கலைவது வாழ்க்கை-அதற்காக
கனவுகள் காண்பதை கலைப்பது முறையா?தோல்விகளில்
கற்றல் வாழ்வின் பிடிப்பாக பிடிமானம் நுகக்கும்.
ஆக!
வெற்றிகளில் மட்டும் களிப்பெழுதுவதை கழித்து
தொலை நோக்கில் தோகை விரி.
தோல்விகள் தோள் தட்டும் போது
முதலில் தன்னைத் தானே தட்டி.
கொடுத்தல் தன்னம்பிக்கையின் முதற் படி.

துவளாத மனமும் எதிலும்,
எதிர் நீச்சல் போடும் வீரியமும்,
முதன்மையாகும்.
சுய பரிதாபம் சூட்டுதல் சூனியம் வரையும்.
எப்போதும், எதுவும் நிகழலாம்.
எனவே முன்னேற்பாடு நயத்தல்
நயமாகும்.

வரும் போது காத்தலும்,வந்த பின்
நோ(ர்)த்தலும் காத்திரமான களமல்ல எதையும்
தொலை நோக்கோடு யாத்தல் விவேகமாகும்.
விதி சொல்லி விழுவதை வதைத்து
கதியல்ல காதையென விழித்திரு.

ஆளுமைகளை அகம் கொள்ளுதல்-அதை
ஆத்ம சுத்தியுடன் அணைத்தல்,
பேதமைகளை களைத்தல்,மடமைகளை
கழித்தல்,
விடையிறுக்கும் விவேகத்தை கட்டிகாக்க.

சந்தர்ப்பம் என்பது
எப்போதும்,எங்கேனும் இலங்காது.அதை
இலங்கும் போது நலங்கிடுதல் நயம் நாட்டும்.
விலங்கது என்று வில்லங்கம் சூட்டினால்
மலங்கி,கலங்கி,மாய்தல் மானம் கரைக்கும்.

எனவே!
கூடும் தானங்களை தரம் பற்றி,
ஊடும் உலைப்புக்களை தரம் பிரித்து,
வாடும் வனப்பெழுதாமல்,
பாடும் மனம் கொள்க,பாதை அது திறக்க.

வெற்றிகளில் கரம் கொடுப்பதை விட
தோல்விகளில் தோள் கொடுத்தல்
நியாயமான செயற்பாடாகும்.
அது ஆரோக்கியமான ஆதார்சமாகும்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதிக்க,அதை
வேடிக்கை பார்த்து நக்கலடிப்பதைவிட,
அவனை கைகொடுத்தெழுப்பி உற்சாகப் படுத்தல்,
கோடி கிடைத்தாலும் கிடைக்காத உவப்பது.
வார்த்தைகளிற்குள் வசப்படாத வாகையது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்