செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

வசிட்டர்களிற்காக காத்திருக்கும் வயல்.


பிரீத்தோதும் பிறவிகளால்,
பிரிந்திருக்கும் தமிழ் கூட்டமைப்பு.
எந்த தெரிவேந்தி இன்று தேர்தலில்?
சிந்தாத சிந்திப்புக்கள் சிதைந்தொழிந்து,
சின்னா பின்னமாக பின்னலிடும் பிறழ்வில்.

அண்ணன் இல்லையெனில்,
ஆளுமையும் அரோகரா!
தண்மையான தகமெல்லாம்,
தடம் புரண்டு அரோகரா!
திண்மை அங்கே தீ எழுதும்,
திடமெல்லாம் தீக்கிரையே அரோகரா!

வண்ண, வண்ண வளமெலாம்,
வயலறுந்து செயல் குலைந்து,
திண்ணைப் பேச்சாக திடகாத்திரம் தீய்ந்ததினால்?
பலமற்றப் போனதால் பகை-
வாசல் எம் "பா" எழுதுமா?

ஆளுமையற்ற அரசியலால் என்ன தகம்
நாம் குவிப்போம்?
சூனியமாய் அங்கு சுடரெரிந்து அணைந்ததுவா?
கூனியம் எம் குன்றாக குலமேந்துமா?
அன்றிலிருந்து இன்று வரை இந்த
பேரினவாதம் எம்மை பெயர்த்தெடுத்ததே தவிர
எந்த ஆளுமையையும் எமக்காற்றவில்லை.
இது என்றும் எம் வரலாறாக வழி காட்டும்.

ஆயுதம் இழந்தோம் அதனால் அத்தனையையும்
இழந்தோம்-ஆனாலும் மாற்று வழி ஏதும்
இல்லை.
எனவே மாற்றமான களமேந்தி
மீண்டும் நாம் தரிக்க தளம் ஒளி கூட்டும்-இதுதான்
தாற்பாரியம் இதற்கு வருடங்கள் கூட ஆகலாம்.

இதை எதிரியே தீர்மானிப்பான்-அது
எங்கே?,எப்போது?எப்படி?ஏன்?
விடை தெரியா வினாவாக இது நீட்சி காட்டாது.
காலம் களம் திறக்கும்.
கோலமிது மாறும் கொற்றங்கள் குழுமும்.
ஞாலத்தில் எமதான ஞாயிறு உதிக்கும்-அது
உலவும் இந்த உகைப்பெல்லாம் உறுத்தறுக்கும்.

எம் இடையே விசுவாமித்திரர்கள் அதிகமா?
துரோணர்கள் அதிகமா?
ஒட்டுக் குழுக்களே அதிகமாகி போனார்கள்.
எமக்கு தேவையானவர்கள் வல்ல வழி காட்டும்
வசிட்டா்களே.
இருப்பெழுதும் இவர்கள் இழைவார்கள்-எம்
உறுப்பெழுதி மிளிர்வார்கள்.

மாறும்,களம் மாறும்
நிச்சயமாய் இத்தனையும் மாற்றம் பெறும்.
சுழலும் பூமிப் பந்து இந்த மாற்றத்தை
அங்கீகரித்து எம் ஆயிலியம் வரைய மாறும்
எல்லாமே மாற்றம் பெறும்.
புறச் சூழல் இந்த புதுமையை புகுத்தும்.
பொறுத்திரு அதுவரை உன் தேசியக் கடமையில்
கரம் கொடு.எல்லாமே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்