வியாழன், 8 ஜூலை, 2010

அழுது கொண்டிருக்காது ஆத்மீகம்!


ஏந்திய கருவியை ஏலம் வைத்தான்-இவன்
எல்லோரையுமே சிதைக்க வைத்தான்.
சிந்திய இரத்தமது கொஞ்சமா?ஈழ
சிந்துகள் அழிந்தது இவன் வஞ்சமே.

உறவாடிக் கெடுத்த ஊழியன்- இவன்.
நவீன எட்டப்பர் கூட்டத்தின் நயவஞ்சகன்.
அறம் கொன்றது போதாதென்று,
இன்று -
வெறி
நட(ன)மாடுகின்றான்.தமிழர் குருதியில்-
ஆரியர் வீ(வி)தியில்.

ஆடு தாண்டவா ஆடு -ஆடு
கூட தாண்டும் நீ கூத்தாடு.
பேடு ஆன பேமாளி நீ-
பெருமை கொள்வாயா கோமாளி?

நாடு தாங்குமா உன் நர்த்தனம்?எந்த
நாவும் உனையே அர்ச்சனம்.
பீடு பிறழும் பிறப்பேந்தி-உன்
பீடம் யாவுமே இறப்பேந்தி.

பொழுது வருமே தன்னாலே அதை
உழுது கொள்வாயே உன்னாலே,
அழுது கொண்டிருக்காது ஆத்மீகம்-அது
விழுது எழுதும் வித்தகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்