ஞாயிறு, 31 அக்டோபர், 2010

நானிலம் நிறைந்த நல்லவர் ஒளிர்வார்.


காலக் கடவுளரால் கனதியாக படைத்து,
வைத்த பாமரத்தனங்கள்.
பாரில்-
பார்ப்பனமெழுதும் ஈனத் தனங்கள்-
ஈற்றில் இரவல்
தாயகம் தேடி
ஒளிந்தே ஓயும்.

இது
காலக் கட்டளையாய்
ஓலம் தறித்து உரமாகும்-நாளை
பார் என் நாயகனே-இது
வீர்ர்கள் விதைந்த விளை நிலம்.
வியப்பெழுத உலகம்
விரிந்தொரு தருணம்
வினையாகும்.

கட்டமைப்புக்கள் களைந்ததாய்-
கனதி படைத்த கயவர் நிலம்
களேபரம் சூடும்.
நிலவரம் பார்க்க-
நீயிருப்பியா அன்றி நானிருப்பேனா எம்
நிலமிருக்கும் –இந்த
நிழல் சூட எம் நாயகரிருப்பார்-
நானிலம் நிறைந்த நல்லவர் ஒளிர்வார்.

ஈழக் கடனொதுக்கம் நிறைவாக
ஈடு செய்யப்படும்.
துலாம்பாரமாய் இது துகிலெழுதும்.
ஈடாட்டமற்றதாய் ஈற்றில் ஈழம்.
எங்கள்
ஈசனின் வழிகாட்டல் மடலெழுதும்.அது
தமிழீழ தாயகத்தை தாலாட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்