சனி, 23 நவம்பர், 2013


வேதனைகளின் விளிம்பில்
வெம்புகின்ற இதயங்களின்
சோதனைகளை யார் அறிவார்?
அறிந்தவாரக ஒருவர்
இருந்தார்.

இரும்பொத்த இதயம்
யாவையும் புரிந்த தகயம்.
கரும்பான காணிக்கை.
பாரில்!
நெருப்பான வேள்விக் கணை
நு்ண்ணிய தலைமை
நுனி வரை ஏகிய தகமை
தன்னையே
தந்த காணிக்கை

தந்தை என்றும்
தனயன் என்றும்
தமிழீழக் கொள்கையை வேரறுக்க நின்ற
ரத்தங்களையே வேரறுத்த வேதியர்கள்கள்

கொண்ட இலட்சியத்தால்
சூழ தமை ஈய்ந்த எம்
செம்மல்களே!

உமை மறந்தா எம் வாழ்வு
உலகில்
ஈடேறும்.
மறத்தல்
மானிடத்தில் மனதப் பண்பல்ல
தான் ஈன்ற உயிர்க்கு தானமாய்
தமை
ஈடாக்கும் பேரியல் பெற்றோம்
காண்.

உனை இகத்தில் எக் கணமும் ஏற்றி
தொடருவோம்
விடுதலை பயணம் காண்.

வெல்வோம் எனும்
பாத்திரத்தில் காத்திரம் கொள்வோம்.
சாலவே தொடரும்
சாலை நாளை எமதாகும்
சொல்லாத காரியமும் நாளை
செழிப்பேறும்.

வீதியெங்கும் விடுதலை கானங்கள்.
விதி ஏற்றி எம் விடுதலை பயணங்கள்
ஒரு சேதி சொல்லும் அகவலயம் கொள்வோம்.
மாவீரங்களிற்கு
இந்த
மாதவ நாளில் எம் அர்ப்பணங்கள்.
கண்களிற்க்கு தெரியாத
காரியங்கள்
கனதி சூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்