வெள்ளி, 8 நவம்பர், 2013

எதிர் பார்ப் பூ

சிரித்து
சிதறிய
சிந்தனைகள்
வந்தனம் வருடிய வருடல்கள்
எல்லாம்!
பூரித்து போய்
புவனமாய் ஓர்
பூடகம் காட்டின!

இன்று
அலர்ந்து போயினவாய்
அத்தனையும் என
ஒரு பொய்த்தலம் காட்டின?

எதுவாகினும்
மலர்ந்த
தலம்
என்றும் மலினம் காட்டாதென
ஒரு கைத் தலம் பற்ற கண்டோம்.
இது
காணிக்கை எம் காலக் கதிரவர்க்கு
என்று
ஊது சங்கெடுத்து.

பொறுப்பெடுத் பொழுதுகள்
ஓயாது
காண்
மறு
தலம் பற்றார்-
மையல் அது காண்.

தைத்த புண்களில் என்றும் ஓர் காயம்
மைத்ததுவும்
மையல் காண நினைத்ததுவும்
ஒரே ஒரு காயம்தான்
ஆறாத செயலிகள் ஆறாது.
ஆற்றாமல் தீராது காண்
ஆண்டு 2014 ல்
ஒரு ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்