புதன், 4 டிசம்பர், 2013

                                    பெருந் தலைவ!



நன்நெறியுடன்
வல் பொறி முறை பூண்ட
வல்வை மைந்தனாய்
வையகம் வந்தாய்.

செல் நெறியுடன் நீ வகுத்த
பல் களங்களும் பல்கி பெருக
பிறவியெடுத்த பெருந் தலைவ
அகவை 59ஆக
புகும் உன் வாழ்வு நிறை
தகமையான அகமையாக
ஆளுமை தந்தவனே!
வாழி நீ
வாழ்த்தேவும் பெரும் பேறு
உனதான பிறப்பால் எனக்கும் தேறியதுகாண்.

வனப்பெழுதும் நீ வைத்த பார்வையின்
தினம் இன்று.
தனை எழுதும் பேறாக்கிய
நினை
நிந்தன் பெருஞ் சுவடியை
காலம் கருக்கொண்டு
ஞாலத்தில் உந்தும் ஒரு ஒளி புலர.

வாழி நீவிர் என
வையகம் வாழ்த்தெழுதும்
போதும் உன் பெருங் கனவை
நனவாக்க நாளை கூடும்
மாவீரக் கனலில் ஒரு
உறுதி கொள்வோம்.

அது!
தமிழர் கனவை மென் மேலும்
அமிழ்தாக்க ஒரு ஆக்கம் பேணும்.
மாறுதல்களில்
நின்
வார்த்தையால் அகவுவேன்.
போராட்ட வடிவம் மாறலாம்
கொண்ட கொள்கைப் போரது மாறதென
மீண்டும்
ஒரு பெருவொலி இவ் வுலகம் நெய்யும்.

"தமிழரது தாகம் தமிழீ(ழுலக)த் தாயகம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்