புதன், 4 டிசம்பர், 2013


தொழவே முடியாத
உங்கள் தொழுவங்களைவிட
எங்களின் ஆழ மனதில்
அமைதியாக உறங்குங்கள்..

அதிதியானாலும்-
ஆழக் கடல் கடந்தே நாம் வாழ்ந்தாலும்-
ஆழமான நேசத்தில்!
உங்களின் சுவாசங்களாக நாமிருப்போம்.
இருக்கின்றோம்.

ஆதலால்தான்-
சில கால குழப்ப,கலக்கங்கள்
ஒருவகை கலகங்களும் கூட -
கலைந்தது.
கலைத்தது உங்களின் தியாகங்களும்
யாகங்களும்.
போகும் பாதை தூரம்தான்.
பெரும் இன்னல்கள்
இடர்கள் சூழ்ந்ததுதான்.

பெரு நெருப்பாற்றை கடந்தவர்கள்-நீங்கள்
சொல்லற்கரிய சாதனையாளர்களாய்
வழி காட்டினீர்கள்-இந்த சுவடே
எமது பாதையாய்
இயங்கு நிலை வேறு.ஆயினும்
இலக்கில் மாற்றமில்லை.

அமைதியாக உறங்குங்கள்-
அதிதியானாலும் அறுதியாய் இலங்குவோம்.
இதுதான் நேற்றைய நாளில்
நேர்த்திய நோற்றல்கள்.
கார்த்திகைப் பூவில்
களங்கமில்லாமல் காப்பாய் இயங்கும் காத்திரர்கள்
காட்டும் கனதியான வீதியில்-
புது விதியெழுதுவோம்.
பூப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்