வெள்ளி, 6 டிசம்பர், 2013

அடிமைச் சாசனத்தின்
எழுதாத
தீர்ப்புக்ளை
அடியோடு மாற்ற இவன் எடுத்த
ஆயுதங்கள் பல!

அமைதி வழி ஆர்ப்பாட்டம்-
ஆக்கிரமிப்பு வெள்ளையனிடம்
வேகாதென புரிந்த போது
ஆயுதமே ஆயுதமாக
அரண் காட்டினான்.

அமைதிக்கும்
ஆட்சி கவிழ்ப்பிற்க்கும்
உடந்தையானானெ
மடந்தைதனை விரித்த
வெள்ளையனால்
தீவொன்றினுள் தீ ஆனான்.

மானிடத்தை நேசிக்க
கற்றுக் கொள்ள இந்த அகிலத்திற்கே
அறை கூவலை தன் செயலாக்கியதால்
செவிலியனான்.

பெற்ற விருதுகளை விட
கற்ற பாடங்கள் பல உண்டு இவனிடம்
அதில்
சுதந்திரமும்,
மானிடமும் மகுடம் சூட்டும் சுட்டிகள்.

கறுப்பு
வெள்ளை
இனம் யாபேரும் பெற வேண்டியது
சுகந்தமான சுதந்திரமான
அகிலமே அவன் கனவு.

அடக்கப்படும் இனத்திற்கு
இவன் ஒரு வழிகாட்டி!
இடர்படும்போதெல்லாம் தெம்பூட்டும்
நுகர் தடி.

தனதான இன விடிவில் முழுமையான
வெற்றிபெற்றானா?
இல்லையா?
அதற்காகவே வாழ்ந்து காட்டிய
இவன் வரலாறு கூறும் சேதியில்
அவன் வெற்றியின் யதார்த்தம் பிரதிபலிக்கும்.

போய் வருக!
இன விடுதலை பெருஞ் சுடரே!
ஏன் இறந்தான் தேவனென
உலகம் வடிக்கும் இரங்கலில்
உளம திறந்தது போல்
எம்
மண்ணிற்கும் ஒரு விடிவெள்ளியாய்
போய் வருக.
போற்றுதற் கரிய அடலேறே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்