புதன், 4 டிசம்பர், 2013


நினைவுகளின் தடத்தில்
ஒரு பாதம் பணிந்து
நீர்த் திவலைகள் பனித்து
இதயமே ஒரு மெளன ரீங்காரத்தை
ஓசையின்றி இழைத்தது.

மழையும்,அதன் சாரலும்
மெல்ல எம் தேசம் தழுவிய ஒரு
மாலைப் பொழுதில்
ஆலய மணியின் கணீரென்ற
ஒலியிழையில்
தேசத்து மலர்கள் யாவும் சிலிர்த்துப் போயின.
அது ஒரு காலமாக!

இன்று!
மூலைக்கு மூலை பல மூடர்களின் கண்காணிப்பும்
ஈரமாக்கவா இல்லையா எனும் உந்துதலில்
இயற்கையின் இசைவின்மையும்
மனதை நெருட--
நின்றொரு ஒலி கொட்டும் எண்ணம் மனதை உந்த
மனைகள் பலவற்றில் தீபாரதனையுடன் ஒரு மெளனாஞ்சலி
எது நடந்தாலும்-
ஏக்கம் சுமக்கும் நெஞ்சகம்
இயங்கத்தான் சாலவே தடமிடும்.

நடந்தது!
நனவாகவே சகல இதயத்திலும்.
இது
ஆரியர்களின் அடக்கு முறையால்
வீரியம் பெற்றது.
இது
குருதியோடும்,நரம்பினூடும்
இழைந்த சங்கமம்.

தேசத்தின் புதல்வர்களை
எம் நேயத்தோடும்,பாசத்தோடும்
என்றும் நினைவாக்கம் கொள்வோம் எனும்
நனவாக்கத்தின் நல்லிருப்பாய்.
உதிர்ந்து
தொலைந்து கோணாது இந்த
உயிர்ப்புக்களின் ஊடு தளம் எனும்
பயிர்ப்பாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்