வெள்ளி, 6 டிசம்பர், 2013


மனம் நிறைய பேச எழும் ஆவல்கள்.
ஒரு
ஆதங்கத்தின் கீற்றாக அலைமோதும்
போதெல்லாம் அணைபோடும்.
துணை கூட அதை துய்க்கும்.
ஏணைகளில் என் எண்ணங்கள்
வரட்சியாக வற்றிப் போகின்றது.

ஏதுமே ஆவலற்ற உள்ளங்களால்
சாதுவான ஒரு துணைபோல
சதா காலமும் சஞ்சரிப்பதாய்
பதாகை தூக்கிய தோள்களையும் காணோம்?

ஒரு போக காலம் முடிந்ததுபோல் பின் வாங்கும்
பல உள்ளங்களின் முதுகுப் பார்வையால்---
தெருவோர பாடகனாய் மனம் பின்னும்
உணர்வுகளில் என் உளம் தேயும்.

நோகின்ற உள்ளம்
நோகாத இணைப்புக்கள்
பிணைப்புக்களில்
எந்த ஒரு பிரயோகமும்,
ஏன்


பிரியோசனமும் இல்லாமல்
தேடும் அலை மேல் துரும்பா?

எடுத்த ஒவ்வொரு அடியும்
வடு சுமக்கும்.
ஆதலால் திண்ணம் இன்னமும் துணிவேற்றும்.
சாதலாவதில்லை இந்த சதா நினைவுகள்
எண்ணங்களின் அடிச் சுவடு
பாதை செப்பனிடும்
நாள் வரும வரை
மனம் நிறையவே பேச எழும்
ஆவல்களுடன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்