புதன், 4 டிசம்பர், 2013


முகிழொன்றாய்
நெகிழ்வகற்றி நெறிகட்டிய விந்தை-இன்று
அகிலமெலாம் அவன் ஆளுமை.
தகித்த வேதனையிலும்,
சகிக்கவே முடியாத சோகத்திலும்
செழிப்பேற்றியது காண் இன்று
தமிழீழ,தமிழக உறவுகள்.

இது!
உலகெலாம் உலவும் உலவு.
கலப்பில்லாத உவப்பு -இது
காலம் காலமாய் எம்
கரிகாலனால்,அவனது
தரிசனத்தால் தாளொற்றிய சிறப்பு.

பொற்காலம் ஒன்றை போரால்-அதன்
பேரால் வேர் கொள வைத்த விந்தையது.
தொலை நோக்காய்
தொக்கிய வீரியம் -அதன்
ஆளுகைகள் இன்று அவன் பேருடன்
மாதவ வீரர்களையும் மையப்படுத்தி
உணர்வுகளை,இதன் தெறிப்புக்களை
அதனூடான விறுமங்களை நம்
ரத்த நாளத்தில் தறையும் விந்தை நாளிது.

அது!
தமிழர்களின் விருத்தம் என்றால்
வடக்கில்,கிழக்கில் ராணுவத்திற்கு கருத்தலாக?
அதன் பெயர்தான் "பிரபாகரன்"
மறு பெயர் மாவீரச் செம்மல்கள்.

விளக்குகளிற்கு விளக்கெதற்கு.
ஒவ்வொரு
இதயக் கூட்டிலும் தேசம் பூராகவும்,
நாளை ஒளிரும் ளெிச்சத்தை என்ன செய்வதாக உத்தே(வே)சம்?
பாவம் பயப் பிம்மங்கள்.
ஒரு தீபம் ஒளிர்ந்தாலே
பளீரென அறையும் தடமே
திடமான மாவீர இருப்பு.
மாதவம் செய்த மாநிலம்.

பூப்பந்தல்
பூம்புனலாய் நாளை ஓடியே ஒரு
புது வீச் செய்யும்.
இது காலத்தின் கட்டளை
கடைசித் தமிழன் இருக்கும் வரை இறவாது.
இது
நீதி மட்டுமல்ல நியதி(தீ)யும்.
இதயத்தால் உங்களின் ஈகங்களில் நனையும்
தேசம் பெரும் கங்கணத்தால் ஒரு கணம் வேயும்.
அது
காலப் பெரு வெள்ளத்திற்கு காத்திரமாய் கூறும்
கூற்றாக -----

உங்கள் உறுதிகள்
உறு தீகளாக உரிமம் சூடும்.
இத் திங்கள் தரும் சேதியது.
எத் திங்களிலும்,சிங்களத்தாலும்
வதைக்கவோ,ஒடுக்கவோ முடியா பெருந்தீயாக
மாவீர இல்லங்கள் ஒளிரட்டும்.
அவர் தம் ஈகையின் பேரால்.

உமது யாகங்களை,
எமது தாகங்களாக கையகப்படுத்தினோம்
எனும் தார்மீக சேதியாக.
தமிழரின் தாகம் தமிழீ(ழுலக)த் தாயகமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்