சனி, 9 ஜூன், 2012

நினைவுகளை உறுத்தும்
செயற்பாட்டை வலியுறுத்தா
நனவுகளை உனை சிதைக்க
நியமெழுத ஊடுகின்றேன்.

யாரையும் சாடும் எண்ணம் அறவே இல்லை.
ஆயினும்
யாரும் சாராமல் யதி சூடியவனை வரையாமலும்
இருக்க முடியவில்லை.
பேரிற்காகவோ அன்றி
பெயர்ச்சிக்காகவோ அன்றி
ஊரிற்காக உதவும் கரம் நீட்டிய அந்த
நீட்சியை
தரவிறக்காமல் தணிவதில்லை என் தகவிறக்கங்கள்.

நிலையில்லா இடம் தேடி
நிரந்திர இடம் நாடி
பரந்த மனங்களின் பதம் நாடி
நிறைந்த நிமிர்வால் நிலையெழுதிய
தரத்தில் தாகம் நிறைத்த சன சமூக
திறப்பு விழாவின்
சிரத்தையில் அகம் நிறைய
அட்சய பாத்திரமாய்
அன்று பெரும் பதிவெழுதிய பாக்கியம்
பெற்றவன் பாலேசன்.

கணணி ஒன்று
காலத்தேவை கருதி
கடமையாற்றிய காலக்கடனில்
பெருமை மிகு பேறு பெற்றவன்
விழாவன்று
உண்டிகள் ஊருக்கு உவந்தளித்த சேவையில்
தனித்துவம் ஆற்றியவன்

கட்டுமான தேவை கருதி
கனதியான நிதியும்
நெருடா உளமும்
நேர்த்தியான நெடுவான் வளமும்
நோக்கிய நின்மதிக்கு
எனதான தொடுதள நன்றிகளை
உவப்பாக உரித்தாக்க
தெளிவான தெரிவெடுத்தேன்.

உரித்தானவனே
உளக் கொள்
உவந்திருப்போம்.
உடமைகளை கடமையாக்கி
கடந்தவனே
காரியம் கைகூட என் கரந் தந்தவனே
நேரிய வழியில்
நெய்ந்தாய் நேர்கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்