செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

நிறைவெழுதிப் போகும் என் வீதியில்
பெயர்
பெயராமல்
சில ஆத்மங்களின்
குடியிருப்பில்
என் குதங்கள்
உயிர்ப்பெழுதும் போதினில்
என் இருப்பிருக்கும்
இவர்களின் பெயரில்
என் நெருப்பிருக்கும்


இதை
நாளையே என்
நா
வண்மையால்
நாடி எடுத்து
பொடிகளற்றி ஒரு பொய்கை வரையும்
பேறில்
என் பொறுப்பின்
இருப்பு
இறுமாப்பெய்யும்.

வசிட்டர்களை
வரலாற்றில்
படித்த எனக்கு
விசிட்டர்களாக
என்
தொடர்பில்
வகுப்பெடுக்கும்
வருணர்களிற்கு
வசந்தமான
வருடல்களுடன்
வாழ்த்தெழுதும் பேறகற்றினால்
என்
பெயர் தவிரும்.
 
துயர் தரும் சேதிகள் தவிர்க்க
துஞ்சாமல் என் தொடர்பெழுதலில்
படரும் ஒரு பாக்கியம்.
வெட்டொன்று துண்டிரண்டென
வேய்தலில் அவன் பாங்கில்
நெஞ்சகம்
நெருடி
வாயார
வருடுகின்றேன்.
பஞ்சாட்சரம்*
சரம்
மொய்ய
சுரம் பாடும்
இவன்
சரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்