ஏகாந்தம் ---
காந்தமானதாக கனக்கும் மனம்.
ஏகாந்தம் இனிமையானதா?
ஏந்தும் எந்த வழியிலும் சிலுவையானதாகவே
எனக்குபடுகின்றது.
தனிமையில் என்ன இனிமை காணமுடியும்?
தயாரிக்கும் தார்மீகமெனில்
அப்போதும் தனிமை எனக்கு கொடுமையானதே.
ஏது
செய்தாலும் யாராவது அரற்றுவதற்கு
எனக்கு ஒரு பக்கத் துணைவேண்டும்.
அன்றேல்
ஏதும் என்னால் ஆற்ற முடியாது.
எழுதும் போதும்
இடையிடையே ஏதாவது கதைத்தால்
தடையாக இருந்தாலும் ஒரு
உடை ஒன்று ஒன்றும்.
கற்பனைக் குதிரையில்
நான் என்றுமே சவாரித்ததில்லை.
வெறும் விற்பனங்கள் சூடி
வறுமையை வேய்ந்ததில்லை.
ஆதலில்தானோ
தனிமை
எனக்கு
கனிமையகற்றி போகின்றது?
உண்மையில்
தனிமையில்
இனிமை காணுபவர்கள்
காணலாமென காதலிப்பவர்கள்
என்
களத்தில் தளமிடுங்கள்.
தனிமை
ரொம்பவும் கொடுமையே எனக்குள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக