மனித சமூக வியாபாரத்தின்
மிகப் பெரிய மூலதனம்
கடவுள் எனும் கற்பனைக் பொருள்.
இந்த வியாபாரமும்
அதனூடான மூட நம்பிக்கையும்
இதனூடாக விழையும்
இம்மியும் பயனற்ற
இடரும்
எந் நாளும் அற்றுப் போகாது.
வலிமையற்ற வலிமையது
பலனே அற்ற பாதையது
புலனே ஏற்காது -ஆயினும்
புடம் சரியாத பூர்வீகமது.
ஏமாற்றுபவர்கள்
இருக்கும் வரை ஏமாறுபவர்கள்
இருப்பார்கள் என்பதன்
எளிமையான விளக்கவுரையிது.
தாற் பாரியமும்
தர்மம் என்பார்
தகமும் இதுவென்று தாயக்கட்டை வீசும்
தப்பான சமூகத்தின்
ஒப்புவமையும்
ஒவ்வாமையும்
ஒற்றி நிற்கும் சாரம் இதுதான்
இத் தளை
கவிழ்ந்தால்
தார்மீக சமூகம்
தளைத்தே ஓங்கி விடும்.
சுனை பாயும் சுகலயம்
சுட்டு வீழ்த்தப்பட்ட
தட்டுக்களின் த(ட)டையம் புரிவீரே!
மனித சமூகத்தின்
மூலப் பொருளின் பெரு வியாபாரி
கடவுள் எனும் கற்பனைக் காண்டமே.
மூடப் பழக்கம் முடங்க
தேடாமலே எம் சுதந்திரம் சுகிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக