எள்ளி நகையாடுது!
எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்,-தம்மையும்
தமிழரென்றே தரம் வேறு தார்மீகமாம்-எது
ஈழ விடைதலையின் பால் ஏகம் கொள்ளும்?-எதிரி
தன்னை ஏந்தும் இந்த வக்கற்ற கூட்டங்கள்-எந்த
வைடூரியத்தை எங்கள் மனவிருளகற்ற
மா`` விளக்கேற்ற போகின்றார்கள்?
ஆட்சியில் எந்த ஆர்ப்புக்களும் எல்லாள
காட்சிகளை கானம் ஏற்றாது.
மாட்சிகள் எங்கள் பரப்பில் என்றும் ஏந்தும்,
சாட்சிகள் எல்லாம் இன்று சரணாகதியாய் முகாம்களில்
வாயடைத்து,வயிறடைத்து,மூச்சடைத்து
எங்கள் முத்தாரங்கள்,
எந்த மூலவன் இவர்
கையறு நிலையை காத்திரமாய் கானம்
ஏற்றுவார்?
ஒற்றுமை அகன்ற எம் உறவுகளே!
ஒற்றும் இந்த ஓனம் ஒகர-நீ
ஏற்றுவாயா? தமிழ் ஒற்றுமையின் சாகரம்,
இல்லை உன்னால் அது என்றுமே இனி-இந்த
தளம் தகிக்காது.ஏனெனில்
வல்லாளன் பிரபாவின் வனங்கள் இந்த
பார்ப்பனர்களின் பாதையால் பரப்பிழந்து-
மீட்சிகள் எல்லாம் வெறும் காட்சிகளான பின்கூட-நீ
சாட்சிகளகற்றும் சாரளத்தில் தான் இன்றும்
எம் எதிரியின் கைக்கூலியாய் அவன்
கானமிசைக்கின்றாய்-போலிக்கு பிறந்த
போக்கற்றவர்களாய் அரிதாரம் மிக அழகாக,
மீண்டும் உங்கள் அகத்திற்கு ஆழமாய்
அறைந்து ஆரமிடுவது,
ஆயுத போராட்டமே மீண்டும் எங்கள்
களம் கனதியாக வேண்டும்,
தோல்வி என்பது எங்களின் படிக்கட்டுக்களாய்
தோழமை கொள்ள வேண்டும்,
அழுதலும், தொழுதலும் எந்த
ஆளுமைகளை அரங்கேற்றாது,
விழ,விழ எழுதலே எங்கள்
வலுவான வையகம்-இதை
மெனமையாய்,மேன்மையாய்
மீள மீண்டும் அகக் கொள்
ஆளுமைகள் மையம் தரிக்கும்,
ஆற்றல்களை இனி ஆதரவாய்
தேற்றி தோற்றம் கொள்,எங்கள்
பகலவனின் பாதம் எங்கள் பரப்பேந்தும்,
புவியே!
பிரபாவின் பிரம்மங்கள் களம் மீட்கும்
காலத்தை நாம்தான்
கலயமேந்த வேண்டும்-இனி
இழத்தல்கள் அற்ற இருப்புக்கள் வலயம்
இருத்தும் வன்மங்கள் வாகையாய்
தரமேற்றும் அந்த தாளங்கள்
உரமேற்ற உவகையாய்-உன்
கரமேந்த கருவிகள் களம் மொள்வோம்,
ஈழத் தமிழம் தகமேந்த
வேற்று வழி நிச்சயமாய்-அந்த
நரகத்தில் இல்லை,ஆற்றாமையை
அகமகற்று,கால வெள்ளம் இந்த
கலயத்தை மிகவும் நேத்திரமாய்
உந்தன் சூத்திரமாக்கும்,
நிச்சயமாய் இதுதான் நீதி பகற்றும்,
இது காலத்தின் கட்டளை,
ஸ்ரீ லங்காவில் என்றும்
சீதளக் காற்று வீசாது,எங்கள் களமெரிந்த
அந்த கலசத்திற்கு காத்திரமான
ஒரு முடிவேந்தாது எந்த ஒரு முச்சூடும்
முகிழ்வுகள் அதன் முற்றம் முகராது,
இது கால வெள்ளத்தின் கனதியான
கட்டளை,
இகமே!
இருந்து பார் இது ஈடேற்றாமல்
வையகத்தில் எமக்கு எந்த மூச்சுக்
காற்றும் முத்தாரம் சூட்டாது.
ஞாயிறு, 11 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
-
▼
அக்டோபர்
(17)
- பிரிகேடியரின் பிரம்மங்கள் பிறவிக் கடனாற்றும்.
- பெளதீகம் தர்க்கிக்கும் தாக்கம் தரமேற்ற!
- சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.
- என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?
- தினம் மென்னி கிள்ளும் மேனியரை!
- வல்ல பகையால் எங்கள் வாசல்!
- எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்!
- சரிசாசனம் சாத்தாத சங்கதிகள் இனி!
- உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக!
- தடையின்றி விடை இறுக்கும்..
- என்ன கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?
- எம் இதய உளவுரண் அசையாது,
- விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…
- எள்ளெரிக்கப் போகல்லையோ?
- நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,
- சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடி...
- ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல,
- ► செப்டம்பர் (8)
-
▼
அக்டோபர்
(17)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக