ஞாயிறு, 4 அக்டோபர், 2009

எம் இதய உளவுரண் அசையாது,

இருண்டதெல்லாம்
மரு அளிக்குமா?நாம்
மனத் திடம் கொண்டால்
ஒளி மறையுமா?
கருக் கொண்டதெல்லாம்
கரு அழிக்குமா?காலன்
விருக் கொண்டாலும் விதை அழியுமா?

ஒருக் கொண்டு ஒப்பாரில்லா
கரிக் கொண்டாலும்-மெருக் கொண்ட
திருக் கோயில் வீதி விலக்குமா?கால
வெள்ளம் அதை கரை ஏற்ற எம்
ஞாலக் கதிரர்கள் ஞாயிறாக அங்கு.

சீலம் சிந்தும் எங்கள்
ஞாயம் அஞ்சும் வழி அறியா
விழி பிதுங்கும்,மொழி ஆக்க
பழி ஏற்கும் பார்த்திபங்கள்
பரமங்களை மிகவும் பாத்திரமாய்
அரண் கொள்ளும் வேளையிது

எத்தனை வேலி இழந்ததாய்
இங்கு எத்தனை பேர் தம் அரிதாரம் களைந்தார்
தம் உத்தமமான உழைப்பென்று
அவர் தரித்த ஆடைகளை எம்மை
அம்மணமாக்கி அவர் நாணாமல்-எம்
நாணங்களை அவர் தம் நாணயமாக்க,
நம்
நாயகர்களின் நாமம் நரித்தார்,


இத்தனை காலம் சூடிய
அடையாளம் அகற்றி தம்
முகத்திற்கு அஞ்சியதான வேசை முகம்
முகர்ந்தார்,பரிபாலனாய் எம்
பார்த்தனை பாரெழுதும் பரிணாமம் களைந்தார்.
பலம் இங்கே பழுவேந்திய போதே தன்
பக்கங்களை கலசமாய் களைந்நெடுத்த
இந்த
இடும்பர்பளாலே எம் இதய உளவுரண் அசையாது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்