இருண்டதெல்லாம்
மரு அளிக்குமா?நாம்
மனத் திடம் கொண்டால்
ஒளி மறையுமா?
கருக் கொண்டதெல்லாம்
கரு அழிக்குமா?காலன்
விருக் கொண்டாலும் விதை அழியுமா?
ஒருக் கொண்டு ஒப்பாரில்லா
கரிக் கொண்டாலும்-மெருக் கொண்ட
திருக் கோயில் வீதி விலக்குமா?கால
வெள்ளம் அதை கரை ஏற்ற எம்
ஞாலக் கதிரர்கள் ஞாயிறாக அங்கு.
சீலம் சிந்தும் எங்கள்
ஞாயம் அஞ்சும் வழி அறியா
விழி பிதுங்கும்,மொழி ஆக்க
பழி ஏற்கும் பார்த்திபங்கள்
பரமங்களை மிகவும் பாத்திரமாய்
அரண் கொள்ளும் வேளையிது
எத்தனை வேலி இழந்ததாய்
இங்கு எத்தனை பேர் தம் அரிதாரம் களைந்தார்
தம் உத்தமமான உழைப்பென்று
அவர் தரித்த ஆடைகளை எம்மை
அம்மணமாக்கி அவர் நாணாமல்-எம்
நாணங்களை அவர் தம் நாணயமாக்க,
நம்
நாயகர்களின் நாமம் நரித்தார்,
இத்தனை காலம் சூடிய
அடையாளம் அகற்றி தம்
முகத்திற்கு அஞ்சியதான வேசை முகம்
முகர்ந்தார்,பரிபாலனாய் எம்
பார்த்தனை பாரெழுதும் பரிணாமம் களைந்தார்.
பலம் இங்கே பழுவேந்திய போதே தன்
பக்கங்களை கலசமாய் களைந்நெடுத்த
இந்த
இடும்பர்பளாலே எம் இதய உளவுரண் அசையாது,
ஞாயிறு, 4 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
-
▼
அக்டோபர்
(17)
- பிரிகேடியரின் பிரம்மங்கள் பிறவிக் கடனாற்றும்.
- பெளதீகம் தர்க்கிக்கும் தாக்கம் தரமேற்ற!
- சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.
- என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?
- தினம் மென்னி கிள்ளும் மேனியரை!
- வல்ல பகையால் எங்கள் வாசல்!
- எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்!
- சரிசாசனம் சாத்தாத சங்கதிகள் இனி!
- உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக!
- தடையின்றி விடை இறுக்கும்..
- என்ன கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?
- எம் இதய உளவுரண் அசையாது,
- விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…
- எள்ளெரிக்கப் போகல்லையோ?
- நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,
- சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடி...
- ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல,
- ► செப்டம்பர் (8)
-
▼
அக்டோபர்
(17)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக