எள்ளெரிக்க போகல்லையோ?நீங்கள்
எள்ளெரிக்கப் போகல்லையோ?
கொள்ளி வைத்து உந்தனது கொற்றங்களை
எரிக்கின்றான்—நீங்கள் எள்ளெரிக்கப் போகல்லையோ?
எள்ளெரிக்கப் போகல்லையோ?
வெள்ள முள்ளி வாய்க்காலில்
வேதனாயால் உன் இனம்
வேண்டாத
கொற்றம் இல்லை அவன் வேதனையை
வேய்க்கவில்லை-நீங்கள் எள்ளெரிக்கப் போகல்லையோ?
எள்ளெரிக்ப் போகல்லையோ?
அங்கு கொற்ற சனியினின்,
சங்கூதல் கேட்கல்லையா,நாங்கள் இங்கழுது
பங்காத பாட்டெடுத்தோம் `பா` கேட்கல்லையா?
வெங்களத்தில் வேதனையில் வெந்த சனம்
கொஞ்சமா?இங்கு வேர்த்தழுது நாம் கோர்த்த
கோரங்கள் கொஞ்சமா?
நீயெடுத்து கல்லதனை கடவுளாய் படைத்துவிட்டு,
அதை காப்பதற்கு காத்திரமாய் கோயிலதை கட்டி விட்டு
அங்கு காப்பதற்கு காவலனும் காக்க வைத்த,
பேதனைகள் முடிவதற்கு
எள்ளெரிக்க போகுமையா,
எள்ளெரிக்க போகுமையா,
இல்லாத ஒன்றதைனை எத்தனை காலம்
காத்து நிற்பாய்?
உன்னை உண்டாக்கி வைத்துவிட்ட
காப்பரணை என்ன செய்வாய்?
நாடது இல்லையென்றால் நானும் கூட இல்லையல்லோ,
காடது காத்திருக்கும் காலம் எல்லாம் என்ன செய்வாய்?
பாடக எங்களை பாடையிலே ஏற்றி வைத்தான் பகைவன்
பாடையிலை ஏற்றி வைத்தான் நீ பாங்காக பாட்டெடுத்து
பள்ளி கொள்ளும் பார்ப்பனக்கு எள்ளெரிக்க ஏக்கம் கொண்டாய்.
ஈழத்து தமிழனிற்கு நாளெல்லாம் சனி பிடிக்க-நீ
நாகரீகமாய் நாளெடுத்து எள்ளெரிப்பாய்,உன் மூத்த குடி
எரித்து வைத்த எள்ளதனால் ஏது சுகம் கண்டு கொண்டாய்?
-உன் வருங்கால
சந்ததிக்கும் நீ எள்ளெரித்து ஏற்றம் வை.
காலமது காலமாய் காவியாக நீ இருந்தாய் அதனால்
கண்டதெல்லாம் என்னவென்று
காவலாய விளக்கு வைப்பாய்?
எள்ளெரித்து வாழ்வதற்கு ஏற்ற பாதை எங்கு உண்டு?
உன் காலெரிக்கும் நோயதற்கு காத்திரமாய்
மருந்து உண்டு,
காலகாலமாய் காவித்திரியும் மூடமான முட
நம்பிக்கைக்கு
எள்ளெரிக்க நியமம் உண்டோ?
பகுத்தறியும் உன் புத்திக்கு என்னதான் பகுப்பாய்வு வைத்தாய்?
வகுத்தாய்ந்து உன் வைப்பகத்தை
வையத்தில் விரித்தெழு, விருத்தம் எழுதும் உன்
வேதனைக்கு விரிவாகும் இந்த பிரபஞ்சத்தின்
விஞ்ஞானத்தின் ஞானம் கோர்,
அவனவன் இன்று சனி கோளதில் சாரளம் திறக்க
சாலைதனை வகுக்கின்றான்,
ஈன தமிழ இன்னமும் ஏனோ?
ஆதி கால ஆய்வகற்றி ஆழமான பாதை அகற்றி
மீதி உள்ள காலத்திற்கும் மிளகெரிக்க
ஐயகோ!எள்ளெரித்து நீ உள்ளெரிந்து வாழுகின்றாய்.
பரிதாபத்திலும் அரிதாரம் பூசும்
இந்த கலி கால நாயகர்களே
கரிகாலந்தான் களம் மீட்கும்,எரிக்கும் உன்
எள்ளு உன் ஏகாந்ததிற்கு கூட எள்ளுப்போடாது.
சந்திரனில் இன்று தண்ணீர் வளம் உண்டாம்,
தன் சடையில் வைத்த உன் சாகசனிடமே இனி
வருங்காலம் வையகம் கொள்ளும்,இது விஞ்ஞானத்தின்
வீரிய காலம் இன்னமும் ஏனோ,
இந்த சைவம் என் அசைவம் சூடும் மூட
நம்பிக்கை வைரவர்களே!
பலமே என்றும் பால் அமைக்கும் உன்
இந்து மத்திலும் இதுதான் பாலர் பாடம்,
வலம் வா`` வரம் தரும் இந்த
வையகம் அறி ஆற்றாமை என்ற மையை ஆற்றில் எறி.
தாயகம் என்ற தாகத்தைஉன் கண்ணில் விரி.
எள்ளை எள்ளி விதைக்கும் நுட்பம் நூண்,இந்த
விதை கூட நாளை உன் இளைய சந்ததிக்கு,
ஒரு விறைப்பான விதை கொள்ளும்.
சனி, 3 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
-
▼
அக்டோபர்
(17)
- பிரிகேடியரின் பிரம்மங்கள் பிறவிக் கடனாற்றும்.
- பெளதீகம் தர்க்கிக்கும் தாக்கம் தரமேற்ற!
- சில்லென்ற சீவிதங்கள் ஈழ மலராய் ஈடேறும்.
- என்ன சாகசம் காட்ட சாசனம் எழுதினான்?
- தினம் மென்னி கிள்ளும் மேனியரை!
- வல்ல பகையால் எங்கள் வாசல்!
- எங்கள் எதிரிகளின் கைக்கூலிகள்!
- சரிசாசனம் சாத்தாத சங்கதிகள் இனி!
- உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக!
- தடையின்றி விடை இறுக்கும்..
- என்ன கொற்றம் கொள்வாய் என் கோகுலமே?
- எம் இதய உளவுரண் அசையாது,
- விந்தகத்தில் இது நியாயம் ஆனாலும் அதுவே நியமம்…
- எள்ளெரிக்கப் போகல்லையோ?
- நீளும் இந்த பதிவாய் நுகம் கொள்ள,
- சிறப்பேந்தட்டும் சிட்டுக்கள் நாளை எம் வானம் சிறகடி...
- ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல,
- ► செப்டம்பர் (8)
-
▼
அக்டோபர்
(17)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக