செவ்வாய், 27 அக்டோபர், 2009

பெளதீகம் தர்க்கிக்கும் தாக்கம் தரமேற்ற!


ஏமாற்றும் ஏற்றம் தோற்றம்--யாரை
ஏமாற்றவும் இந்த தேற்றம்,
ஊற்ற,ஊற,வீற்றும் வித்தகம் நாளை
உலகறிய எல்லாமே?ஏளனம் சொட்டும்.

காற்றுக்குள் கூடு கட்டும்
மார்க்கம்
எந்த மையத்தில் மனிதம் ஏற்கும்?
மீள் குடியேற்றமென்ற ஏமாற்றும்
கொற்றம் மகிந்தாவின் ராஜதந்திரம்.
தூற்றுகின்ற துர்க்கன் துகிலுரித்து,
தூர் துவைத்து துளை போட்ட துலாம்பரம்-ஏன்
இவ் வையகம் வாய் பொத்தி மெளனம்?

இளைஞர்கள் இளம் தலைமுறைகள்
இன்று காதகனின் கைகளில் கனதி இழந்து
சான்று யார் சார்த்தார்கள்,கேட்டார்கள்-இவர்
சா“ விளிம்பில் சாகா வரம் பெற்றதை-எந்த
சாத்வீகர் சாகரம் சாய்த்தார்?

ஏய்!
ஐரோப்பிய அறிவாளிகளே,
உன் வரிச் சலுகைக்குள் இந்த வைரிகளை
மடக்கும் மார்க்கம் அறியாயா?ஏன் எங்கள்
உற்றங்களின் சாவினிற்கான உற்பவம் உரக்கக் கேளாயா?
நீதிகளின் காவலர்களே!,
மனித உரிமைகளின் மையர்(ல்)களே!
வெறும் சல்லிக்காசு சதைப்பதற்காக எங்கள் இளவல்களை
ஈனச் சாவாக்கிய,இரக்கமற்ற இருளர்க்காக,

எங்கள் “சா“ மேட்டில்,
உங்கள் சகவாசங்கள்,
வியாபாரிகளே,
வெறும் கஞ்சிக்கும்,மருந்திற்குமா,
வன்னி மக்கள் வ(சு)யமிழந்து தவிக்கின்றார்கள்?
ஞாபகம் உண்டா-
ஹிட்லரின் விச மாடங்கள்?
இருந்தால்!
எங்களை இந்த ஊனத்திற்கு உள்வாங்கியவனை
ஐ.நா மன்றில்
நீதியின் மடியில் நித்திரை நீவ-நீவிர்
நித்திலம் அமைக்கலாமா?

எங்கள் „மா“ விதைகளின்
விரையழிப்பிற்கு என்ன மாதவமாற்றப் போகின்றாய்?
எங்கள் மாநிலம் விரிய இன்னமும்
எத்தனை விதைகளை
ஈகமளித்தும் எங்கள்
மான நிலம் சமைப்போம்,
மார்க்ங்களின் ஈரத்திற்கு ஈகமாய் என்ன
கோர்க்கப் போகின்றாய்?
தர்மம் தலை நிமிர,
தமிழீழம் தரணி தரமேற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்