ஞாயிறு, 11 அக்டோபர், 2009

சரிசாசனம் சாத்தாத சங்கதிகள் இனி!

நமைச்சலின் நச்சரிப்புக்கள்
அமைக்குமா ஆனந்தம்?
குமைக்கும் குதங்கள் குங்கிலியம்,
கூட்டுமா?
எமை எமைத்தவன் அமைத்ததே
சமையலாகும்.
சாயல் இனி
எரிமலையாய் எழுந்தல்
உளம் சரிக்கும் சிங்களம்.

சரிசாசனம் சாத்தாத சங்கதிகள்- இனி
எந்த சாலையையும் சாராது.
உரிமங்களின் உரியாசனம் உலவாததால்,
பரிமாணம் பாற்றும் பகலவ பாதைகள்,
கரிசல் காட்டு கட்டமைக்கும் கனதிகள்,
விரிசலகற்றும்.
எங்கள் விபரம் விரிக்கும்.
புரிதல் இனி சகாயம் சதைக்கும்.
எங்கள் விரிதலின் வினைகளை வினயமாற்றும்.
பரிமாணங்கள் நிச்சயம் தரிசனமாக்கும்.

எரிந்தவைகள்!
எழும் ஏகம் கரிக்கும்.
சிரித்தவைகள் இனி சிந்திக்கும் முன்
இவைகளெல்லாம் புரிதலின் புன்னகையில்,
மரித்த மார்க்கம் சில் ஊடகத்தில்,
மீண்டும் பணம் பண்ண பண்ணசைக்கும்,
இந்த கூட்டங்கள் தங்கள் கூத கைகளை
கூச்சமின்றி மாற்றியோர் மாரணைத்து
மாமன்றம் மாற்றுவார்,
இவை அன்று போலவே என்றும்,

இன்றும்!
இவைகளில் மாற்றம் என்ற மாற்றம்,
என்றும் இணைந்திருக்காது.
மனிதாபிமானங்களே என்றும்
மாற்றங்களுடன்
கற்றகமாக வீரியம் சூட்டும்.

தோற்றமே இல்லாத மாக்களிடம் எங்கே
தேற்றமான தேர்விருக்கும்?
இவர்கள்
எங்கள் எரிதணலிலேயே தங்கள்
அடுப்புக்களை ஆனந்தமாக ஆலிங்கத்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்