சனி, 13 ஜூன், 2009

அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.


லாவண்யம் சிலாபிக்க லாவகம் வேண்டும்,
வியாபிக்கும் விறல் இருந்தால் விற்பனங்கள்,
களம் திறக்கும்,
தளம் கொள்ளும் தானங்கள் ரூபம் கொழிக்கும்,
வினயங்கள் விடங் கொள்ள விகிதங்களும் முகம் கொள்ளும்,

கொள்ளுகின்ற விகிதங்கள் ஊனங்களை உடன் திறக்கும்,
அள்ளுகின்ற அவதியிலே அவசரங்கள் முகம் தெளிக்கும்,
மொள்ளுகின்ற மோகத்திலே மேகங்களே அகம் தெறிக்கும்,
கிள்ளுகின்ற திடனதனால் கிறக்கங்களே நிதம் தறிக்கும்,

தறிக்கின்ற நிதமதனால் தரமெல்லாம் தடம் புரளும்,
முறிக்கின்ற முகம் தானங்கு முகாரிக்கு முகாம் அமைக்கும்,
பறிக்கின்ற பதமதுவே பதவிகளை பதம் பார்க்கும்,
நெறிக்கின்ற நெறியதனால் நேயமெல்லாம் நெகிழ் நொதுக்கும்,

நொதுக்கின்ற நெகிழ்வதனால் நோயங்கே நுகம் சுரக்கும்,
மதுக்கிண்ணம் மனம் நாட மனமதுவே மடம் நிரப்பும்,
நொதிக்கின்ற நோவதுவே நோன்பாக மனம் அறுக்கும்,
வதிக்கின்ற வலமகன்று வதைமுகமே வரம் வறட்டும்.

வறட்டுகின்ற வரமதுவே வாழ்வதனை வதம் கொள்ளும்,
திறக்கின்ற மனமகன்று பாழ்வதனை பாரமெடுக்கும்,
உறக்கின்ற உளமகன்று உயர்வங்கு கீழிறங்கும்,
மறக்கின்ற மனம் வேண்டி மதியதுவே இமை மூடும்,

மூடுகின்ற இமையதனால் முடிவென்றே மூப்பெய்தும்,
பாடுகின்ற பதம் மறந்து பரம பதம் பாவியாகும்,
ஊடிநின்ற உறவெல்லாம் உளமகன்று மையம் நீங்கும்,
வாடி நிற்கும் வசமெல்லாம் வாசமகன்று வரைபு வசம்பும்.

வசம்பி போகும் வரைபெல்லாம் வந்தகன்ற காலம் மீட்கும்,
கசங்கி அது காய்ந்ததாக கற்பனையே கரம் குதறும்,
நிசங்கள் அகன்ற கடந்த காலம் கனிவகற்றி காலம் உதறும்,
உசாத்தி நின்ற உறுதுணையோ ஒதுங்கி நின்றே உன் வசம் பறிக்கும்.

பறிக்கும் வசம் வைரியாய் வாழ்வெல்லாம் வாசல் தெளிக்கும்,
நெறிக்கும் நேயம் உதிர்ந்ததாக காலம் கடந்து ஞானம் தோன்றும்,
படித்து,படித்து படித்த பாடம் பல்லவியை பதம் பார்க்கும்,
பாவி உன் பாதகத்தால் பதமிழந்த பலம் கேட்கும்.

ஆதலால்!
அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்