செவ்வாய், 23 ஜூன், 2009

அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.


வியாக்கியானங்களிற்கு விடை கொடு,
விதைந்தோரை வீரியம் கொள்,
அகந்தோறும் ஆரை ஆற்றும் ஐவரை அகம் கொள்,
ஆக்கமான தாக்கம் தகப்போரை தரமேற்று,

பத்மாநாதனின் பத்ம வியூகத்தில் பரவு,
உருத்திரன் உண்டாக்கும் உருத்திரத்தை உள் வாங்கு,
பருத்திரளான பாதம் பதி,பாரதில் பரவி விரி,
வெருளித்தனமான வெப்பகத்தை வெளியேற்று,

உத்தமர்களின் உள்ளக்கிடக்கைக்கு உரம் ஊற்று,
செத்தவர்களாகவே சேடமிழுக்காமல் செம்மனம் சேர்,
புத்திரர்களின் பூடகம் பூச்சொரி,வித்தகங்களை அவர்
வித்திட விவேகமேற்று.

எத்தனை நாள் இன்னும் சொத்தை ஏற்றுவாய்?
காத்திரமாய் களமியங்க கற்ற காதை கடை,
சுத்தமாக சுயமாக இலங்கு,சூழ்நிலையை சுளி,
பாதையின் பாவத்தை பரிந்தெடு,விட்டு,விட
விவாத விதங்களை விகல்வு,

இருப்பது,
இல்லாமல் இருப்பது,
இவை இப்போ இருள்.
செருப்பது போல் சேர்த்திருப்பதை செருக்கு,
கருப்பான காத்திரம் கருக்க களமானதை கனம் காவு,
விருப்பான விதமிருந்து வீதம் விடிவேற்ற விகை,

ஒற்றுமையின் ஒருங்கமைப்பை ஒப்பேற்று,
வேற்றுமையின் வேதியங்களை வெறுப்பேற்று,
பற்றுமையுடன் பதியங்களை பரப்பேற்று,
உற்றுமையுடன் உதயங்களை உறுப்பேற்று.

சாற்றும் சாரங்களின் சாதூரியங்களை சாதி
நூற்று எம் நுதங்களை நொருக்காமல்,நெறி,
மாற்று வழியமைக்கும் வாசல் வருடு,
போற்று அந்த போதியர்களின் பேற்றை போற்றி.

தீற்றும் திறவர்களின் திறனில் தீரமாய் திளை.
வற்றும் வரமேற்ற வக்கணையாய் வதி
சுற்றம் சூழ பற்றுறுதியுடன் பாகையை பகிர்
கொற்றம் கொலுவேற கொள்கை கோர்ப்போரின்
இற்றுப்போகாத இகத்தை இயல்பாய் இருப்பேற்று,

நற்றுணை நாற்றிட நால் வகை நாண நதி,
குற்றம் குரைப்பதை குறி விலக்கு,
சற்றும் சளைக்காமல் சாதகங்களை சார்,
ஒற்றும் ஒற்றங்களை ஓர்மமாய் ஒதுக்கு,

விற்றுப் பிழைக்கும் வினையற்றவர்களை விதியகற்று,
சிற்றறிவு சீவியர்களை சீலம் விலத்து,
நெற்றலில் நெரிக்கும் நெற்றற்றதை நெரி,
தெற்றித் தெற்றி தேகம் தேசிப்பதை தெறி,
வற்றிப் போகா வல்லமை வகையாக்கு,

ஊற்றெடுக்கும் ஓடை ஊர் சேர உறவாடு,
நாற்றெடுத்த நாற் புயங்களை நாவேற்றி நாடேற்று,
ஆற்றெடித்து அற்றாக்கியதை ஆக்க அகமெடு,
காற்றடித்த காரமெல்லாம் கலந்தாடுவதை கரி,

பேறு வேறென்ன பெற்றோமென பேதமை பேதி,
ஊறு உற்றென்ன உற்றோமென உறங்கல் உரி,
ஈறு இற்றென்ன ஈற்றோமென ஈதல் ஈய்,
வீறு வீற்றவன் கொற்றத்தை கோல,

மாறு மாற்றான மாற்றத்தை மகிக்க,
தேறு தேற்றவன் தேசத்தை தேகிக்கும்,
தோற்றத்திற்கு தோகையாக தோள் கொடு.
ஊற்றாக உந்தன் உறுதுணை உறுக்க உறு,

காப்பகம் காற்றும் காத்திரம் கன,
தோப்பகம் தோரணிக்க தோத்திரம்,
தோக்கும் அந்த தோரணிக்கு தோரமான,
ஊக்கம் உள வளமாக உள்ளவரை உதவு.

ஆக்கமது ஆற்றும் ஆதங்க கணை அணை,
போக்கமது போக்காமல் போகிக்க போதி அணை,
தாக்கமது தாக்காமல் தளமிக்க,
தாக்க மிக்க தரமிணை,
நீக்கமது நீக்காமல் நிறைந்திருக்கும்,
நிமிர் நிலைக்க நினையிணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்