செவ்வாய், 2 ஜூன், 2009
கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
சங்கம் வளர்த்த தமிழினத்தின் சங்காரக்குடி இவன்,
அங்கம் பிளந்தங்கு ஈழ தமிழரின்,
தங்ககம் அகற்றியதான தகமையாய் இன்று,
எங்கும் ஏதிலியாய் தமிழன் மாள சங்கம் திறந்து,
சங்கூதித் தமிழர்க்கு சவக்காடு ஏற்றிய சந்தோசம்,
உன் தேகம்,ஆக்கிய அகம்,
தலைக்கேற கொண்டாடுகின்றான்,தான் பிறந்த சாரம் மறந்து.
கோலகலத் திரவியங்கள் கோலேந்திக் கொண்டதனால்,
ஆலகால விசங்கொண்ட மகிந்தாவின் மகோற்சவனாய்,
காலம் பல காலம் வாழ்கவென காங்கிரசும் கரங்சொறிய,
வீழா வல்லா வீசகங்கள் விதைத்து நீ வாழ்கவென,
மகிந்தாவும் மனம் கொண்டான்,ஆதலால் நீ
உதி(றை)த்(ந்)த நாளில் உற்சாக திருவிழா தமிழரை வதைத்த
வெ(ற்)றி விழா,உன் அகம் மகிழ ஆரியனின் ஆத்மார்த்த பரிசு.
கொலைக்களம் கண்ட எம் வன்னி சொந்தங்களும்,
போர்க்களம் சூழ்ந்த போர்முகம் நீக்கி,தீர்க்கவல்லா
தீவினையும் தீர்த்த எம் தீ முகக் கருண நிதியே,
உன் கருணைக்கு நீ கொண்ட கருண நிதி வாழியவே.
பதவியின் சுகங்களை பத்திரமாய் உன் புத்திரனிற்கு,
பாங்காய் நீ பேணிக் கொடுத்த பவிசை யாம் என்னென்போம்?
விலை பேசி நூதனமாய் நூர்த்துவிட்டாய் எம் பகையை,
வலை வீசி வீழ்த்தி விட்டாய் வஞ்சகமாய் எம் துணையை,
நிலை மாறிப்போனாலும் நீர்க்காது எங்கள் களம்,
உலை வைத்து எரித்தாலும் எரியாது எங்கள் போர்க்குணம்,
மலை போல எதிர் வந்தாலும் மசியாது கொண்ட கொள்கை,
சிலை வைத்து சீவியம் காண சீலம் கொள்ளோம்,
உளம் கொள்ளு.
வீரக்,
கலைக்கெல்லாம் காவியம் சூட்டும் கரிகாலன் பேர் உரைத்தோம்,
நிலைக்காக தானை நூர்க்கா நிர்ணயன் அவன் தாள்க்கொப்போ நீ,
சந்ததி வாழ எமை எரித்தாய் தகுமோ பார் உன் சந்நதி.
இலையான் போல் அலைவோனே இல்லையென்றே ஆவானா?
அலை எறிந்து ஆழி அகமதை சிதைத்தாலும்,
அலாக்காயதை ஆர்த்தெறிந்து ஆகியிருப்போம் அணைத்ததனை.
வீரத்தின் விழுமியத்தின் விற்பகனை,
எம் இத்தக வீரன்.
முலை வாயில் நீ மொவ்வ முரசம் அறைவோனே.
வலை வேயில் வகைந்திட வசமாமோ வேலுப்பிள்ளை.
குல வாழ்வை கோர்ப்போனே,
குணவானைக் கலைப்பாயா?,
நல வாழ்வை உன் நலங்கார்க்கு நகைத்திருந்தாய்,
தலப் பாகை நீ மொய்ய ஈழத்தமிழன்,
என்றும் தமிழ் அகத்தானில்லை.
விலைப்பலகை போட்டு வைத்து,
வீசகம் ஓர் தட்டு வைத்து,
விற்க நாம் பொருளில்லை.
சல,சலத்து நாம் குலைய நீ கொடுத்த,கொடையில்லை,
வெல,வெலத்துப் போக நீ நமைத்த நாரீசமில்லை,
குடு,குடுக்கும் வயதிலும் கூர்ப்பெய்ய நினைப்போனே,
வெடு,வெடுக்கும் உடம்பதனை,வேர்க்கும் வயததனை,
நிலைத்து,
நீ,
நிமிர்வெடுக்க நின்றதெல்லாம் அறுத்தாயே.
உறுப்பாயா?உணர்வதைக் கொன்ற வயதில்,
அரசியலைத் துறந்திருந்தால்!
அகிலமே வாழ்த்தெழுதும்,
அகவையை நீ இழந்தாயே.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக