வியாழன், 25 ஜூன், 2009

உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.


அகம் சுரக்கும் ஆதங்கம் அறிவாயா?
நுகம் இழந்த நூதனம் நுகைந்தாயா?
சுகம் இங்கு சுகிக்க நீயும் சுழற்பாயா?
இகம் இழைய இதமாக இணைப்பாயா?

கால நேரம் கடந்திடும்,
களைவாயா?
சாலச் சக்கரம் சடங்கிட,
சகிப்பாயா?
கோலக் கொடுமைகள்,
கோடிட கொதிப்பாயா?
மீள இவைகளை மீட்டிட மிளிர்வாயா?

எங்கெங்கோ சிந்தனைகள்,
ஏகம் ஏய்க்க எழுவாயா?
ஏய்த்து விட்ட நிந்தனைகள்,
மாய்த்து விட மகிப்பாயா?
உய்த்து இனம் உளமேற,
ஊக்கமாய் உழைப்பாயா?
காய்த்து,கருகும் கனதிகள்
களமேற்ற களைப்பாயா?

சிந்தனைகள் இந்த சிறைகளிலே,
சிரம் கொள்கின்றன,
வந்தனை வகைக்க வாய்ப்பில்லை,
வழியில்லை,
நிந்தனைகள் நிதம் நிறைக்கும்,
நீட்சி கரைக்க நியம் இல்லை.

சேய்ந்தனே சேவிக்கும் சேடிகளை,
செவியறைந்து,
கூய்ந்தனை குவலமெல்லாம் கூடி,
சாய்ந்தனையோ?இல்லை
வேய்ந்திடும் வெயிலெடுத்து,
ஆய்ந்திடும் ஆயிலத்தை,
பாய் விரித்து பகடெடுக்கும்,
பாகத்தை பரிந்தனையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்