ஞாயிறு, 21 ஜூன், 2009

நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.


காலக் காய்ச்சல் கதிரோனைச் கற்கவே களமியக்கும்,
கோல விழுமியங்கள் கொலைந்ததாக கொள்கையை கொறிக்கும்,
சீல சிந்தையரின் சிறப்புக்களை சீலம் இழைக்கும்,எங்கள்
மூலவர்கள் மூளையெல்லாம் மூலமாய் மூர்க்கும்.

வேளை ஒன்று வேண்டும் என்றே வேதம் இசைக்கும்,
காளை கலவக்கூட காலநேரம் கலவ வேண்டும்,
மாள அத்தனையும் மறைக்க மர்மம் மதைக்கும்,
சூழ சூர்ப்பனங்கள் சூட்டிய சூரம் சுகைக்க சுழிக்கும்,

மாலை ஒன்று மாயப் புலத்தில் மாயை அகற்றும்,
ஓலை ஒன்றல்ல ஓராயிரமாய் ஓர்மம் ஒற்றும்,
சீலை இழந்ததெல்லாம் சீராகவே சீலம் சிகைக்கும்,
மூலை மூண்டதாக முரசறைந்த மூலம் அகலும்.
காலைக் கதிரவனின் காத்திரத்தால் காலம் கயலும்.

ஊளை அங்கு உலர்ந்ததாக ஊரே உயரும்,
பாளை பார்ப்புலத்தில் பரவலாக பசுமை பரப்பும்,
கூளை குதிர்ந்த கூனர் கூலம் குதிய குரவுவார்,
காளை காத்திரர்கள் கனம் மேவ களமேவுவார்.

வேர்ப் புலத்தில் வேர்த்த ஈனம் வேதம் மடிக்கும்,ஈழ
கூர்ப் பலத்தில் குதிர்ந்ததாக கூடி குலவும்,நீச
போர்ப் புலங்கள் போடியாக வாடி வகைக்கும்,தீர
தீர்ப்புலங்கள் திகைய தீரர் திசையாய் திரும்பும்.

சார் புலங்கள் சாராக் கொள்கை சாதகம் சார்த்தும்,
நார் புலங்கள் நலிந்ததாக நாட்டியம் நயக்கும்,
தேர்க் கலங்கள் தேசியத்தின் வடம் தேர்க்கும்,அங்கு
நீர்ப் புலங்கள் ஆனதாக நிணல்கள் நியத்தும்.நீர்க்கும்
நியங்கள் நிரத்தும்,ஈழ இலங்குகள் இயங்கும்.

உறை நிலையில் உறைந்ததெல்லாம் ஊரகம் உலைக்கும்,
கறை நிலையை காத்தவர்கள் காரகம் கரத்தும்,மேவ
பறை பலத்த பாரியத்தை பார்த்தியங்குவார் பகற்ற,
குறை கூர்த்த கூர்ப்பனத்தின் கூரியங்கள் கூட்டுவார்,

நெகிழ நேரிழைத்-
தாக்கு வாரியங்கள் தகமீட்டுவார்,தகைய த(ள)மி(ழி)யங்குவார்.
வேர் வேர்க்கா வேதினியர்களின் கார்
விலக கார்த்திகை களம் கனலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்