வியாழன், 25 ஜூன், 2009

இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.


ராச பார்வை ராகம் ரசம் ரணந்ததா?
வீச வீணில் விகம் விரயமாய் விழுந்ததா?
ஊச உன்னி உள்ளகம் உழக்கி உழுததா?
நீச பார்ப்பனிய பாதையால் பரவி பழித்ததா?

சாய,சரித்திரம் சாய,
மேய தரித்திரம் மேய,
காய கனத்திரம் காய,
ஓய ஒளித்திரள் ஒளிக்குமோ?

ஓயா,அலைகள் ஓய,
வேயா வேனில் வேய,
மாயா மனிதம் மாய,
காயா கர்மம் காய,
தூயா துன்பம் தீய்க்க,
தீயாய் தீரம் திறக்குமோ?

தாள உள்ளம் தாள,
மேளா மௌனம் மேள,
ஊனா உறுதி ஊள,
ஊக்குமோ?உரத்தி உறுக்குமோ?

தணிய தாகம் தணிய,
பணிய பாகம் பணிய,
அணிய அகங்கள் அணிய,
துணியுமோ?துய்க்க துணியுமோ?

கருக காலம் கருக,
உருக உறுதி உருக,
பருக பகையும் பருக,
மெருகுமோ?உணர்வு மெருகுமோ?
பெருகுமோ?பேளாய் பெருகுமோ?

ஊனம் ஊறும் உள்ளம்,
ஈனம் இறுக்கும் ஈகம்,
மானம் மருக்கும் மௌவ்வல்,
கானம் கலக்குமா?கறுவி கனக்குமா?
காதத்தை காக்குமா?காலம் கலையுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்