வியாழன், 11 ஜூன், 2009
விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
யாருடையோம்!
எங்கள் யாப்புரைப்போம்?
வேருடையோம் வெகு கால ஊருடையோம்,உறவுடையோம்,
பாரம் பாரிய நாடுடையோம்,பண்பிலே பாசமுடையோம்,
வீடுடையோம் வித்தக வீரமுடையோம்.
கல்வியில் செல்வமுடையோம்,
வேள்வியில் வேட்கையுடையோம்,
பள்ளியில் பாரமுடையோம்,யாக்கும்,
வேளாண்மை வேண்மியமுடையோம்,
பாழாண்மையற்ற பாண்புடையோம்.
காடுடையோம்,கடலுடையோம்,கற்பக நிலமுடையோம்,
நீருடையோம் நிழல் நிறத்த நியமுடையோம்,
பாடுடையோம்,பரணியாற்றும் பாங்குடையோம்,
மேடுடைய மேம்புடையோம் மேவி நின்ற தோளுடையோம்,
ஊடுடையா உறனுடையோம் உற்றதெல்லாம் உருத்துடையோம்,
காத்திரமான காவமலுடையோம் கானகத்திலும்,
கானம்,
இசைக்கும் காத்திரருடையோம்.
இத்தனை உத்தரங்களையும்,
பத்திரமாய் பதித்திருந்த பகலவனுடையோம்,
எத்தனை எட்டப்பர்களுடையோம் என்பதிலே,
அத்தனையையும் ஆரிய வசமிழந்தோம்,ஆகுதியாய்
வீழ்ந்துடைந்தோம்,
நுண்ணிய நிலைப்பின்னலுடையோம்,
நுகர்வதற்கான நுணுக்கம் தரித்தோம்,
ஆயினும் உறவாடிக் கெடுத்த உயரிய,
ராசதந்திரக் கழுகுகளுடையதால்,
கருத்து முதல் காவிய செம்மையான சேந்தல்களெல்லாம்,
விருத்து வீசமாய்ந்து விழலான வீதம் தரித்தோம்.
உருத்திருந்து உரமான ஊர் முதல் உளவளம் வரை,
கருத்திருந்தே நாம் காத்திரமாய் தோற்றிருந்தோம்,
நேற்றிருந்தோம்,இன்றிருப்போமா?என்ற நிலையெடுத்தே
வீற்றிருந்த இத்தனை வீதங்களும் விதையறுத்த,
விழுமியம் தாங்கும் விதமாக விரைப்புற்றோம்,
விகைப்போமா?
வீரியம் சுரப்போமா?அன்றி
விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
யார் காக்க எங்கள் அரியாசனம்?
யாக்கும் நிலை எவர் தகைப்பார்?
மேதினியே!
ஈழத் தமிழர் ஈகை வளம் இயைப்பாயா?அஃதன்றி
ஈன இனமென்றே இகமகற்றி இழைப்பாயா?
மரிக்கும் இந்த மகோன்னதமான ஈழவரை,
வரைபொன்று வரைந்தெடுத்து,
சிரிக்கும் சிலம்பேற்றி யுகம் தழுவ நெய்வாயா?இன்றி
எங்கள் தங்ககங்களை தாரை வார்க்க,
தகம் நீ தரிப்பாயா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக