
பச்சோந்திகளின் உச்சம் பரவ உருவேந்தும்,
மச்சம் மருவ மதியிழக்கும் மனிதங்கள்,
உச்சம் தலை உறுத்தும் உயிரழிவுகள்,
பிச்சை பிசிறாமல் பிரவகற்றும் பிரமேத்திகள்.
கச்சை கரமேந்த கர்மம் களிக்குமா?
சொச்சை சொருக்கிழைய சோகம் சொரிக்குமா?
பச்சை பரிந்தெடுத்து பருவம் பகையழிக்குமா?
உச்சி குளிர்வெடுத்து உகாரம் உதிர்க்குமா?
களராத கனமிருக்கும் தளராத தளிர்விருக்கும்,
வளராத வனமிருக்குமா?வானம் வனம் வதைக்குமா?
மிரளாத மான் மீண்டும் மீகம் மீளுமா?ஆழி
புரளாத அலை மீண்டும் கரை காருமா?
உறளாத உரம் வேண்டும் உளம் ஊட்டுவாய்.மேனி
குறளாத குதம் வேண்டும் அதை ஆற்றுவாய்.
பிரளாத பிறையில்லை புவி பூட்டுவாய்,மேவி
அரளாத அறம் ஆற்றும் ஆவி ஆக்குவாய்.
அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்,நீயும்
அனிச்சையாக புறம் புரத்து புவி மீளுவாய்,
கனிச்சதெல்லாம் களிப்பதில்லை கால நதியிலே,இசை
பனிச்சதெல்லாம பரவுவதில்லை பரணி பார்ப்பிலே.
இளிச்வாயாய் இரந்திருக்கும் இகத்தின் இருப்பினிலே
புளிச்சவாயாய் புரந்திருக்கும் புகத்தின் புருவத்திலே,
வளிச்சு இவர்கள் வகர்ந்திருக்கும் வகையின் வழியிலே,
நெளிச்சு என்ன நேர்மை நகர்ப்பார் பகை நெய் நிலத்திலே.
களித்து இங்கு கணக்கு கனக்க கொடுக்கல் வாங்கலா?
கெளித்து இங்கு கொய்யம் கொய்ய கொதிக்கும் கோலமய்யா,
விழித்து விதவும் விரசம் விதிக்க வீதி வேறய்யா?
விளித்து வீரம் விரித்து விதைப்பை வீத மேற்றய்யா!.
இனம்!
இகத்தில் இழைந்து இதயம் இறுக்க இமயம் இருத்துவாய்.
போர் புலத்தின் புன்மம் புரிந்து புயங்கள் பூட்டுவாய்,பகை
நெரித்தெடுத்து பாரில் எங்கள் பாகம் மீட்டுவோம்,ஈழ தாகம்
ஈற்றுவோம்,
எங்கள் ஈகம் இயற்போம்.
மார்க்கும் மார்க்கம் மகிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக