வியாழன், 11 ஜூன், 2009
வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
நிலைத்தெடுக்க நிரையிருந்த நித்தியம், இன்று
கலைந்தாய்ந்த காவியமாய் கச்சிதம் கலைந்து போயினவோ?
வலைந்தெடுத்து வகையறுத்து வரைபு மீறி வற்றியதாய்,
புலமடைத்து புயமகன்று புவனமே புறம் காட்ட,
வகையடைத்து நிற்பதுவே வையகத்தில் நிலையாமோ?
பரபரத்து போன நெஞ்சம் பசுமை இனி வேணுமோ?
கரகரத்துபோன குரல் காஞ்சீரம் இசைக்குமோ?
வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
கயலிழந்த கடலெல்லாம் கானமினி இசைக்குமோ?
செயலிழந்த செவ்வீரம் இழைந்து சேய் வளம் சேருமோ?
மரமரத்து போனதய்யா மானம் அது மாய்ந்த்ததய்யா,
வெலவெலத்து போக உள்ளம் வெம்பியே உளம் காய்ந்த்ததய்யா,
பொலபொலத்து போனதுவாய் போகமெல்லாம் பொசிந்த்ததய்யா,
போக்கிடமற்ற இனம் பொறியினுள்ளே பொதிந்த்ததய்யா,
வக்கற்ற வகையினமாய் வதையகத்தில் வதைந்த்ததய்யா.
சீலம் நிறை ஞாலமிங்கு நாம்,
சிறப்பறுத்து சீந்துவதை,
சீரிய நிலை களைந்து சிரம்
மரத்து சிதறுவதை,
ஆற்றும் திறனங்கு ஆய்விழந்து அகலுவதை,
தேற்றும் நிலையிழந்தோம் தேடும் நிலை நாம் இழந்தோம்.
வாட்டுகின்ற வதைகளெல்லாம் வார்த்தெடுத்து வாஞ்சையுடன்,
ஊட்டுகின்ற உளம் வேண்டி உலகவலம் ஊடுகின்றோம்.
மாற்று விதியுரைப் போரே,
தோற்று விதை விதைப்பீரோ?
காற்றும் எமை காலனாக கருத்துக்கள் காட்டுவதை,
போற்றும் புவி போதகரே புலன் கொளமாட்டீரோ?
பொதுவிதி இதுதானென்றே புலம் மறைத்து போவீரோ?
நல் நம்பிக்கை ஊட்டுவதாய் நாவில் ஒன்றுரைப்பீரே,
வல் வளைப்பு வதை முகாமை முகம் கொளமாட்டீரோ?
சொல்லில் வீரம் காட்டா சோதியரை காண்பீரா?
சொதம்பி வாழும் வாழ்வினையை செருக்கியடக்க சொல்வீரா?
சோகம் பொய்த்து போகவல்ல சேதிகொண்டு வருவீரா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக