செவ்வாய், 16 ஜூன், 2009
காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
நிமிர்த்தி,
நெஞ்சு நெகிழ,
ஆசுவாசிக்க மனம் தீண்டும்.
நினைவுகள்!
என்னை சுற்றி எவ்வளவோ?
காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்,
கனதியான மாற்றத்திற்குள் மாற்றம் முகாம் அமைக்கும்.
விஞ்ஞானத்தின்,சமூகத்தின்,கலாச்சாரத்தின்,
இன்னும்,இன்னும் எத்தனையோ,,,,,,,,,
பொத்தாம் பொதுவான,அன்றாட நிகழ்வுகளின்,
ஆச்சரியமான,
அதே சமயம் என் புல வாழ்வின்,
புனருத்தாரணங்களை கூட,
புசிக்க புலம் பூப்பின்றி,
சுகிக்க மனம் மார்க்கமின்றி!
என் தேசத்துறவுகளின்,
நீச வாழ்வுபற்றியே,
பரக்க,பரக்க மனம் மவ்வும்
ஏதாவது ஒரு விடிவை என்
உறவுகளின் ஏகாந்த வாழ்வுகள்
மைத்து களிக்க ஒரு மாயம் நடக்காதா?
அற்புதம் ஆக்கும் ஆரம் ஒன்று,
ஏதோ ஒரு வகையில்,
எப்படியோ ஓர்ம விதையில் ஔவியம் தடவாதா?
இப்படி,இப்படி எத்தனையோ வாதுக்களை
இதயம் கரிக்க சுமந்தபடி,
உறையும் நினைவுகளை,உறங்கா உண்மைகளை,
மறைக்க!
மனமோ!
மணம் அலரும் மலரின் மையம் இல்லயே.
செப்படி வித்தையொன்று செங்களம் விரிக்காதா?
அங்ஙனம் ஆரியனின் அவையெல்லாம் அழிக்காதா?
அப்படி ஓர் ஆடுதளம் அலை,அலையாய் அலைக்காதா?
அக்கணமே இடும்பர்களின் இதயங்களை ஊடுருவி,
எங்ஙனமும் இந்த இடுபகை வேதினியில்,
இனியொரு காலமும் இனவதையாக்காமல்
அத்தனையையும் அனல் வேரோடு அழித்து,
களைகூட விளையாத காரமண்ணாய்,
சிங்களவன் தேசமது சிதை வீழ்ந்து நொருங்காதா?
இங்ஙனமே என் எண்ணம் இரவுகளில் காணும் கனா?!.
என்றாவது ஒரு நாள்,,,,,,,,,,,
ஏக்கமும்,சுய பச்சாதபமுமாக,சுடர் விட்டு சுடர்வதை.
சுயங்களை வென்றெடுக்காவரை சூத்திரமாகாது
என்பதான,
சூத்திரத்தை சூரியதேவர்களின்றி சுரமமைக்கமுடியாது.
இந்த நியங்கள் மனதெரிக்கும் மையத்தால்,
மீண்டும் எனை ஆ சுவாசப்படுத்தி,
அசையும் அடுத்த,
விநாடிகளிற்குள் சராசரி மனிதனாவே
நானும் ஒருங்கி ஒடுங்கி,
அண்ணாந்து,முகடு நோக்கி,
என் ஆளுமை அகன்ற அகத்திரையின்,
மூடி திறக்க என் நித்திலர்களை
நிதம் எதிர்பார்க்கின்றேன்,
நீல வானம் வெண் பஞ்சு முகில்,
நிர்மலான நீர்நிலை,
ஆழ் கடலின் அமைதியான அலைகள்,
வேப்ப மர நிழல் வெது வெதுப்பான,
இதமான இளங்காற்று,
மூச்சு நிரப்பும் முகாந்திரம்,
முகிக்க தேமாங்கிசைக்கும் தென்னங் கீற்றசைவுகள்
மயிர் கூச்செறிந்து மயிலாட,
மாங்குயில் துணைதேட,
மல்லாக்காய் மனிதம் தன் ஈகத் தேசத்தில்
இறும்பெய்தி இருக்கும் நாள்,
நிர்மலாக நிதம் நியம் தேடும்,
ஊடும் தேதி சேதியா(க்)குமா?
இப்போ,
நடந்ததெதுவும் கனவில்லை,
ஆம்,
கானலும் இல்லை,
ஆயின்!
நடக்கப்போகும் நுதம்தான்,
இனி காரியனிற்கு கதமாக விடியும்,
ஒன்றும் கற்பனை சுரக்கும் சுரமில்லை,
சூனியமாக்கும் சூரமுமில்லை,
விழுதுகள் பற்றும் பாரம்,
தொழு கொம்பாய் தோள் தூக்கும் தோரணை,
ஆழியம் அகற்றும் இதுவரை விதைந்த,
அந்த ஆளுமைகளின் ஆளுமைகள் கைப்பற்றி,
அகிலத்தில் அரக்கர் அதம் அகற்றி
சில்லென்ற தென்றல் தன் தேசம் தீண்ட,,
விடுதலையின் விவேகங்களை,
விஞ்ஞானமும் விஞ்ச விழுதெறிந்த,
சோழன் செங்கூட்டுவனின்,
சேர பரம்பரை பகுத்த பாரியன்,
வகுத்த வாஞ்சையான்,
பகலவன் பிரபாவின் பிரம்மக் கரம்,
இயைந்து இலங்கும் இளைய இதமான,
சமூகத்தின் சாரங்கள் இயல்பான இலக்கணம்
ஈட்டி,
ஈழத்தின் இசைமீட்க
இனியர்களின் ஈடில்லா இலட்சியம்,
இகத்தில் வரையும் புதுப் பூம்புனல்,
புவி மீதொரு பூபாளமிசைக்கும்,.
இனிய தேமாங்காய் எங்கள்
தேசத்துடன் ஈழ நேயம் இயையும்.
புலத்தில் உள்ளதான புத்துணர்வு,
வலத்தில் வள்ளல் வயக்கும் வனப்பு,
களத்தில் கனம் கலக்கும் கலப்பு,
ஆளுமையின் ஆக்கிர காரம்
மௌனிப்பு அருக,
கருக் கொள்ளுமே,கயமை ஒழிப்பு,
காலத்தேவை கருதி கனிப்பு.விதம்
வேற்று நிறம் ஐக்கி ஐதாக்கும் ஆக்கிரமிப்பு மிதப்பு,
காற்று நாளை கைங்காரியமாய் காவி வரும்.
பிறப்பு ஈழ மேனி தழுவ.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
ஜூன்
(40)
- எறும்பாய் இருந்தாலும் எழிலான ஏகம் ஏந்துவோம்..
- இன்னும் எத்தனை தங்கங்களை தரமிழக்கப் போகின்றோம்?
- உயிர்தெழுவோம் உரிமைக் கயலெடுத்து.
- அனிச்சம் பூவது ஆர்ப்பனத்தின் ஆணி அகற்றுவாய்.
- குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவ...
- இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்...
- உளவிருந்தால் உரம் உதிர்க்கும்.
- இறுதி இலகும் இலக்கதை இயைவோம்.
- குந்திய எங்கள் குதங்கள் குதைத்தார்
- அற்ற குளத்து அறு நீர்ப் பறவை ஆய்வை அரி.
- நெய்தல் நேர்க்க நொதிக்கும் நொதியங்கள்.
- பொய்தல் பூக்க போலி பொய்கை போதல் கொள்ளுவார்.
- சாலச்சிறக்கும் சாதகங்கள் சாலை மறியாது.
- சூரியத் தேவன் சூரிக்க சூத்திர்ம சுரி.
- மனக் கொள்ள மருக் கொள்ளும் மானிடம்.
- பரிபாலன் பதிக்க பாதை பரக்கும்.
- ஏக்க விரிசலிலே மாய்ந்திருக்கும் மாட்சி.
- தமிழ்க் கதிர் - தமிழ்த் தேசியத்தின்
- கனதியின் கண்ணியத்தில் கனமிழைப்போம்.
- சிறப்பேந்த சிரியும் சிந்தையில் விந்தை நீ.
- எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?
- ஆர்த்தெடுத்து ஆதங்கமாய் அனல் அள்ளு
- துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்
- காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்
- விழித்திரு அன்றி விலை போவாய்.
- மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்
- எங்ஙனமும் எம் சனமே எம் மூச்சு,
- அனுபவங்களை ஆகர்சி இல்லையைல் அனுபவி.
- தலைப்பு இல்லை
- பட்டாடை படுத்தியிருக்க பாகுபாடு பகுக்குமா?
- விழலாகும் வினையாக வேரறுந்து வேகுவோமா?
- வயலறுந்து போன இனம் வாஞ்சை இனி மேயுமோ?
- சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.
- பகலில் பார்த்திபன் பதித்த பாயிரம்..
- அருவ வழிபாடு அரங்குமா அகப்பாடு?
- மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்
- வாகை எம் கைவசம் வசமாகுமா?
- செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்
- கொ(க)லைஞன் கருணநிதியின் கால(ன்)க் கொள்வனவு.
- ஆரியனை அழிக்க அவனியில் அவதாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக