செவ்வாய், 16 ஜூன், 2009

காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்


நிமிர்த்தி,
நெஞ்சு நெகிழ,
ஆசுவாசிக்க மனம் தீண்டும்.
நினைவுகள்!
என்னை சுற்றி எவ்வளவோ?
காலச் சக்கரம் களைகட்டி இயங்கும்,
கனதியான மாற்றத்திற்குள் மாற்றம் முகாம் அமைக்கும்.
விஞ்ஞானத்தின்,சமூகத்தின்,கலாச்சாரத்தின்,
இன்னும்,இன்னும் எத்தனையோ,,,,,,,,,
பொத்தாம் பொதுவான,அன்றாட நிகழ்வுகளின்,
ஆச்சரியமான,
அதே சமயம் என் புல வாழ்வின்,
புனருத்தாரணங்களை கூட,
புசிக்க புலம் பூப்பின்றி,
சுகிக்க மனம் மார்க்கமின்றி!

என் தேசத்துறவுகளின்,
நீச வாழ்வுபற்றியே,
பரக்க,பரக்க மனம் மவ்வும்
ஏதாவது ஒரு விடிவை என்
உறவுகளின் ஏகாந்த வாழ்வுகள்
மைத்து களிக்க ஒரு மாயம் நடக்காதா?
அற்புதம் ஆக்கும் ஆரம் ஒன்று,
ஏதோ ஒரு வகையில்,
எப்படியோ ஓர்ம விதையில் ஔவியம் தடவாதா?

இப்படி,இப்படி எத்தனையோ வாதுக்களை
இதயம் கரிக்க சுமந்தபடி,
உறையும் நினைவுகளை,உறங்கா உண்மைகளை,
மறைக்க!
மனமோ!
மணம் அலரும் மலரின் மையம் இல்லயே.
செப்படி வித்தையொன்று செங்களம் விரிக்காதா?
அங்ஙனம் ஆரியனின் அவையெல்லாம் அழிக்காதா?
அப்படி ஓர் ஆடுதளம் அலை,அலையாய் அலைக்காதா?
அக்கணமே இடும்பர்களின் இதயங்களை ஊடுருவி,
எங்ஙனமும் இந்த இடுபகை வேதினியில்,
இனியொரு காலமும் இனவதையாக்காமல்
அத்தனையையும் அனல் வேரோடு அழித்து,
களைகூட விளையாத காரமண்ணாய்,
சிங்களவன் தேசமது சிதை வீழ்ந்து நொருங்காதா?
இங்ஙனமே என் எண்ணம் இரவுகளில் காணும் கனா?!.
என்றாவது ஒரு நாள்,,,,,,,,,,,
ஏக்கமும்,சுய பச்சாதபமுமாக,சுடர் விட்டு சுடர்வதை.

சுயங்களை வென்றெடுக்காவரை சூத்திரமாகாது
என்பதான,
சூத்திரத்தை சூரியதேவர்களின்றி சுரமமைக்கமுடியாது.
இந்த நியங்கள் மனதெரிக்கும் மையத்தால்,
மீண்டும் எனை ஆ சுவாசப்படுத்தி,
அசையும் அடுத்த,
விநாடிகளிற்குள் சராசரி மனிதனாவே
நானும் ஒருங்கி ஒடுங்கி,
அண்ணாந்து,முகடு நோக்கி,
என் ஆளுமை அகன்ற அகத்திரையின்,
மூடி திறக்க என் நித்திலர்களை
நிதம் எதிர்பார்க்கின்றேன்,

நீல வானம் வெண் பஞ்சு முகில்,
நிர்மலான நீர்நிலை,
ஆழ் கடலின் அமைதியான அலைகள்,
வேப்ப மர நிழல் வெது வெதுப்பான,
இதமான இளங்காற்று,
மூச்சு நிரப்பும் முகாந்திரம்,
முகிக்க தேமாங்கிசைக்கும் தென்னங் கீற்றசைவுகள்
மயிர் கூச்செறிந்து மயிலாட,
மாங்குயில் துணைதேட,
மல்லாக்காய் மனிதம் தன் ஈகத் தேசத்தில்
இறும்பெய்தி இருக்கும் நாள்,
நிர்மலாக நிதம் நியம் தேடும்,
ஊடும் தேதி சேதியா(க்)குமா?

இப்போ,
நடந்ததெதுவும் கனவில்லை,
ஆம்,
கானலும் இல்லை,
ஆயின்!
நடக்கப்போகும் நுதம்தான்,
இனி காரியனிற்கு கதமாக விடியும்,
ஒன்றும் கற்பனை சுரக்கும் சுரமில்லை,
சூனியமாக்கும் சூரமுமில்லை,
விழுதுகள் பற்றும் பாரம்,
தொழு கொம்பாய் தோள் தூக்கும் தோரணை,
ஆழியம் அகற்றும் இதுவரை விதைந்த,
அந்த ஆளுமைகளின் ஆளுமைகள் கைப்பற்றி,
அகிலத்தில் அரக்கர் அதம் அகற்றி
சில்லென்ற தென்றல் தன் தேசம் தீண்ட,,

விடுதலையின் விவேகங்களை,
விஞ்ஞானமும் விஞ்ச விழுதெறிந்த,
சோழன் செங்கூட்டுவனின்,
சேர பரம்பரை பகுத்த பாரியன்,
வகுத்த வாஞ்சையான்,
பகலவன் பிரபாவின் பிரம்மக் கரம்,
இயைந்து இலங்கும் இளைய இதமான,
சமூகத்தின் சாரங்கள் இயல்பான இலக்கணம்
ஈட்டி,

ஈழத்தின் இசைமீட்க
இனியர்களின் ஈடில்லா இலட்சியம்,
இகத்தில் வரையும் புதுப் பூம்புனல்,
புவி மீதொரு பூபாளமிசைக்கும்,.
இனிய தேமாங்காய் எங்கள்
தேசத்துடன் ஈழ நேயம் இயையும்.

புலத்தில் உள்ளதான புத்துணர்வு,
வலத்தில் வள்ளல் வயக்கும் வனப்பு,
களத்தில் கனம் கலக்கும் கலப்பு,
ஆளுமையின் ஆக்கிர காரம்
மௌனிப்பு அருக,

கருக் கொள்ளுமே,கயமை ஒழிப்பு,
காலத்தேவை கருதி கனிப்பு.விதம்
வேற்று நிறம் ஐக்கி ஐதாக்கும் ஆக்கிரமிப்பு மிதப்பு,
காற்று நாளை கைங்காரியமாய் காவி வரும்.
பிறப்பு ஈழ மேனி தழுவ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்