வியாழன், 11 ஜூன், 2009

சிரிக்கும் சிரசம் சிந்தாக்க சிந்தி.


இலவம் காத்த கிளியாய் இருப்பதை மாற்று,
புலவும் பூத்த கலியை மாற்று,
அலவும் ஆய்த்த அரவாணியாய் அகப்பார்,
நிலவும் நீட்டும் நீட்சிப்பை நிமிர்த்தி,
உலவும் உரச ஊகம் உறுத்து,
பலதும் பரப்பும் பலப்பை பரத்து.

உயரம் உகுத்த உணர்வை உய்த்து,
துயரம் தூக்கும் துக்கிப்பை துவர்த்து,
வயிரம் வகுத்த வகுப்பை வரித்து,
உருகும் உளவை உயர்ப்பாய் உயிர்ப்பாய்.
கருகும் கணிப்பை கசக்கி கனித்து.

பருகும் பாலில் பாசம் ஊட்டு
பருப்பும் சோறும் பந்தம் காட்டும்,
நெருப்பை நெகிழ்த்தி விருப்பை யாண்டு,
கருப்பை பூண்ட கலத்தை யாசி,
விருப்பில் மூண்டு விதப்பை விருத்தி.

கலப்பை இல்லா உழவும் உரட்டும்,
சலப்பை இல்லா சாத்வீகம் சரட்டும்,
நினைப்பை ஏந்தும் நிபுணம் நீந்தும்,
வினைப்பை ஈய்ந்தால் விதியே விதியும்.
சுனைப்பு இல்லா சுகந்தம் சுருக்கி.

ஆய்ந்த ஆய்வு அகத்தல் அறிவு,
மாய்ந்த மாய்வு மதித்தல் மதிப்பு,
சாய்ந்தால் சாயும் சர்வம் சரிக்கும்,
பாய்ந்தால் பதியும் பகையும் பணிக்கும்,
ஓய்ந்தால்,ஒளிந்தால்,ஒலியும் ஓயும்.

வீழ்ந்தால்,விதிந்தால்,முகிழ்ந்தால் முதிர்வு.
ஒழுங்கால்,உதித்தால் உராய்ந்தால் உயர்வு,
மகிழ்வாய் மகித்தால் மனமே மனைப்பு.
மகிந்தா மதித்தால் மனமே மறைப்பு,
ஈன,மானதாகவே ஈழ நினைவே ஈக்காடு.

சூரியம் சுரந்தால் சூனியம் சுரிக்கும்,
வீரியம் விரித்தால் விடையே வினைக்கும்,
காரியம் காய்க்க கடையே திறக்கும்,
மாரீசமெல்லாம் மயங்கி மரிக்கும்.
சாரீரமெல்லாம் சகமாய் சுகிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்