வெள்ளி, 19 ஜூன், 2009

எம் தலங்கள் எமை நோக்க எந்தனரை ஏந்துவோம்?


வாகைகள் வதைந்தால் வாதைகள் வயலும்,
கூகைகள் கூடி குதமெல்லாம் குதைக்கும்,
மேதைகள் என்றே தம் மெய் பரப்ப மேயும்,
உபாதைகள் அனு தினமும் உயரமாய் உரியும்.
பாகைகள் இன்றி பாதைகள் விரியும்.

வேர்ப்புலமெல்லாம் வேகவே வெரிக்கும்.
மாய்ப்புலமாகி மற்றெல்லாம் மடியும்,
பேய்க்கதை கட்டி பேதமையே விழைக்கும்.
வாய்த்த்தையெல்லாம் வகையின்றியே வதைக்கும்.
மூப்பெய்ததாக எம் முகமெல்லாம் முகைக்கும்.

பலத்தின் பாலம் பதைக்கவே பறிக்கும்.
மலமள்ளி எறிந்து எம் மார்பெல்லாம் மதைக்கும்.
களமள்ளி எரித்த காரியம் கனக்கும்,
குலமெல்லாம் கொய்த கோத்திரமே குறிக்கும்
வலம் வந்த எம் வாதமெல்லாம் வதையும்.

வன்னியில் இதுவே வளமாக வலையும்,
புன்னகை மரத்து புனிதமெல்லாம் புதையும்,
கன்னியின் கற்பும் கலவியே கறக்கும்
மென்னியை திருகி மேனியெலாம் திறக்கும்.
எண்ணி,எண்ணி மனம் ஏந்தலே ஏகிக்கும்.

புன்னகை மறந்த தேசம் புல்லரால் புதையும்.
வன் பகை வதைத்தே வன்மம் திண்ணரால் திரைக்கும்.
மென்னகை மெருக மேனி மேதினியை மேயும்
மேய்ப்பனை இழந்ததாலே மெய்யெல்லாம் மேவும்.

உய்ப்பவன் உறைந்ததால் உய்வேற்றி உலவும்
பொய்ப்பனவாக போகி பொய்ப்பேற்றி பொதியும்.
வைப்பகம் வைத்த வள்ள வலமேற்ற வையும்,
கைத்தலம் கரந்ததாலே கைப்பது கலக்கும்.
தைத்தலம் தடவ தடங்கள் தக்கனையே தகக்கும்.

இத் தலத்தில் இனியெம் ஆளுகைகள் இரையும்,
பொய்த்தலமாய் போயினவோ?
போகமெல்லாம் பொய்க்கும்,
மெய்த்தலம் மேதினியில் மருகியதுவோ மாய்க்கும்.
வாய்த்தலங்கள் ஆங்கே வகை,வகையாய் வாதிக்கும்.
எம் தலங்கள் எமை நோக்க எந்த,
எந்தனரை ஏந்துவோம்????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்