ஞாயிறு, 14 ஜூன், 2009

விழித்திரு அன்றி விலை போவாய்.


இதனால் சாரம் கவளும் காதம் யாதெனில்,
சோரம் உட்புகுத்த சேதாரமாகாமல் உளப்பணியாற்ற உடன் புலனுறவுகள் உற்பவம் கவிழாமல் கனதி பொங்க களப்பணிக்கு கை கொடுக்கவேண்டிய தார்மீக பொறுப்பை பொதிக்காமல் பொறுமையாக அதே சமயம் விவேகமாக செயல்படவேண்டும்,

எங்கள் தலைமை உடைந்ததாக உசா,உலாவரும் ஊகங்களை குருத்தெடுத்து கருத்தெறிக்காமல் காரிய சிந்தை வேணி காலப்பணியை கச்சிதமாக,கட்டுமானம் குலையாமல் கவனம் கொள்ளவேண்டும்.முன்னைநாள் போராளிகள் என்ற முதுகெலும்பற்ற மார்க்கங்களை மாதிரி உருக்கொள்வோரையும் கவனமாக கருத்திற் கொண்டு காரணப் புற நிலைகளையும் கருத்தில் நுகர்ந்து உறவாடிக்கொடுக்கும் உன்மத்தர்களையும் உள்ளகம் கொய்க.

நாம் ஒரு சுய பரிசோதனையை காலக் கிரமம் சார்ந்து சுய சூட்சுமம் செய்யவேண்டும்,எதுவாகிலும் இறுதிப்போரின் அறுதியை,அது தழுவிய அகத்தை மையப்படுத்தியே வடம் இழுக்கிவேண்டிய புறநிலைப யதார்த்தம் உள்ளது.ஒவ்வொருத்தரும் இங்கு இணையத்தளத்தில் தங்களின் உருவகத்திற்கு கற்பனையெனும் காலத்திற்கு ஒவ்வாத ஊகங்களை உருமாற்றி தான் ஏதோ களத்தில் இருந்து கடைசிவரை கனம் கொண்டதாக ஏதேதோ தங்களின் வசதிக்கேற்றமாதிரி கயிறுவிட்டு மனம் வாடும் எங்களை நோக்கி கயிறு திரித்து தமிழீழ தேசியத்தை புறம் பாடும்,அல்லது எல்லாமே முடிந்துவிட்டது போலவும்,தேசியத் தலைமையும் லெப்டின்ட் கேணல் தமிழ்ச்செல்வனும் தேசத்தின் குரல் அன்ரன் பாலா அண்ணனும் ஏதோ மாபெரும் வரலாற்று தவறை செய்துவிட்டதாகவும் வரம்பற்ற வக்கணையற்ற எந்தவிதமான மனித நாகரீகத்திற்கும் அப்பாற்பட்ட பொய் புனைகதைகளை களம் வலவிட்டு துரோகத்தின் தோரணைகளை நிதம் போலியாக இங்கு இணையத்தளங்களில் வெறும் பொயப்புரட்டல்களை ஏந்தியவண்ணம் எதிரியின் வலைப்பின்னல்களிற்குள் தாங்கள் வீழ்ந்துவிட்டதை சொல்லாமல் சொல்கின்ற வித்தகத்தை விதம் கொள்கின்றனர்.

அதாவது தேசியத் தலைவர் ஒன்றும் உலக ஒழுங்கை தன் சிந்தைக்குள் சொருக தவறவிட்டதுபோலவும் அதனால்தான் இந்த தோல்வி என்பதுபோலவும் தமிழ்ச்செல்வன் அண்ணர் அவர்கள் சரியான தகவலை தேசியத் தலையையுடன் தர்க்கிக்கவில்லை என்பதான ஒரு சூன்னியமான சூத்திரத்தை தாங்கள் ஏதோ எல்லாம் வல்ல தேசியப்பணிகளால் தேசமீட்புப்பணியை ஆற்றியதாகவும் தேசியத் தலைமை தங்களின் தார்மீகமான செயலாக்கங்களை செவிமடுக்காததாகவும் இது சார்ந்த அர்த்தமற்ற ஆக்கங்களை நாள்தோறும் வெளிவிடுவதன் மூலம் தமிழீழதேசியத்தை நேசிக்கும் மக்கள் எல்லாரையும் மாந்தைகளாக்கும் முட்டாள்தனத்தை மையம் நாட்டி விசவிதை விதைக்கும் அநாகரீக செயலில் ஈடுபாடுகாட்டி எங்களின் விடுதலை வேட்கையின் இதயத்தில் சிலுவை அறைய சிரம் கொள்வதை புலம் பெயர் உறவுகள் வெகு சிரத்தையாக உளம் கொளவேண்டும்.
இந்தவகையில் தன்னை முன்னைநாள் போராளியென கூறிக்கொள்ளும் சாத்திரி எனப்படுபவர் கூறும் தலையங்கம்
வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா,
இதில் இவர் கூறும் மகத்தான எதிர்பார்ப்பு
கீழ்வருமாறு அமைகின்றது.
தலைவன் சாற்றிலைட் மூலம் தன் இருப்பை இனம் காட்டியிருக்கலாமாம்.
எப்படியுள்ளது?
இவரெல்லாம் போராளியா?

புறநிலை யதார்த்தங்களை புரிந்து கொள்ளாத அல்லது கிரகிக்க முடியாத முட்டாள்தனத்தின் முகை என்பது இதிலிருந்தே புரிகின்றதல்லவா?
மேலும் எங்கள் தேசியத் தலைமையை களமகற்ற இப்படியானவர்கள் தங்கள் கற்பனை மூலம் தான் முனைவதும் மேலும் தலைவனை இயக்கம் இழந்துவிட்டது என்றே இவனது ஆக்கம் ஈனத்தனம் சுமந்து வலம் வர எத்தனிக்கின்றது.

கள்ளன், காவலன் விளையாட்டல்ல!
கண்டுபிடி ஒளிக்கிறேன் என்பதான சிறுபிள்ளைத்தனமான சீவியம் இல்லை.இது என்பதைக்கூட புரியாத இவனெல்லாம் முன்னைநாள் போராளியாம்.எந்த இயக்கம் என்பது விரைவில் நியம் காட்டும்.

கடந்த காலங்களில் எத்தனை தரம் எதிரியானவன் எங்கள் தலைமையை
தன் நிலைக்கேற்றவாறு தரம் கொண்டான் என்ற வரலாற்றை வகிக்காத,அல்லது ஊகிக்காத ஊனர்கள் அல்ல. நாம் ஈழத்தலைவனின் தோள் கொடுக்கும் உண்மைத் தொழுவர்கள் நாம்.யாருடைய ரட்சிப்பையும் ரகம் கொள்ளா சிந்தையர்கள்.
ஆகவே இப்படியான முகவர்களை, ஈனர்களை, இனம் கண்டு இவர்களை இடம் கலைப்போம்.விழித்திரு அன்றி விலைபோவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்