செவ்வாய், 16 ஜூன், 2009

துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்


வழுதி!
யார் இவன்?
புழுதி வாரி புவன வலம் வரும்,
இந்த பச்சோந்தி!
வழு சுமக்கும் வகை ஏந்தி
வன்னியில் ஏதோ பகை களம் வாடி,
நோத்தது போலொரு தோற்றம் சூட்டி
தோத்ததாக தோரணம் தோண்டும் இந்த தோல்புலி.

வாரணங்கள் வதைய வதை களம் வலந்தானா?
காரணங்கள் கற்பிதமாக்கி கள நிலை இதுதனோ என
பூரணமாக ஓர் புதுக் கவி புனைகின்றான்.
வீபரணமாக வித,விதமாக வித்தகம் வீட்டுகின்றான்.
மாரணங்கள் மத,மதக்க மரித்ததாக மரணக்கதை கட்டுகின்றான்.
மாறாத வடுச்சுமந்து வலியதன் வாதை வதைக்க,
பாறாங் கல்லொடுத்து பவிசாக பரப்புகின்றான்.

பாவி!
இவன் இழைப்பதெல்லாம் இறையாண்மைக்கு ஒப்பாத
வெற்று ஒப்பாரிதானொன்று ஓடுதளத்தாலே ஓதுகின்றான்.
வேற்று முகவேடதாரி இவன்,
காற்றுக் கூட களமேற கனதியிழக்கும்
கரிகாலன் கட்டளை பீடத்தில் இவன்
பீறு நடை போட்டானா?
பீதி பிதற்றி பிழையாக பிறழுகின்றான்.பிதற்றுகின்றான்.

வாசி,அப்புறம் யோசி,
வழுதி இயற்றிய வழுக்கவி வழுக்கியே வலம் சாய்கின்றது.
எழுதி இவன் என்ன நோற்றான்? என எம் சனம் காய்கின்றது.
கனதியான சேதியேதும் களம் கலக்கவில்லை,
உழுதி எங்கள் உள்ளம் உராய்த்து
மெழுகி இவன் மெய்யெல்லாம் புதைக்க புலம் ஓர் கட்டுரை,
முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3
யார்?
எவர்?
களயதார்த்தம் கனமாகவே புலமும் புரியும்.
குரைப்பதையெல்லாம் எங்கள் குதம் நிறைக்க,நாமொன்றும்
நாதியற்ற, புரிந்துணர்வற்ற, போக்கற்றவர்களில்லை.

சுயபுத்தி.
எங்களின் சூத்திரம்.
ஆயின்,
கேள் புத்தி?
எந்த ஆதங்கத்தையும்,
அரங்கம் நிறைக்குமா அரைக்குடம்?
விபரத்தின் விரலிலே கோலோச்சிய,
வித்தகனை விரவி நிற்கும் நெஞ்சகமிது.
புத்தனின் மெத்தனைத்தையும் மத்தையாக்கும்,
அத்தனை சித்தகத்தையும் சிரசேற்றிய சீரஞ்சீவிகள்.

இத்துணைதான் இங்கு அரங்கமாகிய சதுரங்கமென
இணயத்தில் இவன் இணைத்த சூட்சுமங்களின் சிரசறிவோம்.
ஆதலால்,
அறிவகற்றி எங்களை நீ அகம் தடவ,
ஆக்கமிழக்கும் அகவையின் முகாந்திரத்தை,
மூசிப்பாய்.
விலகு வழுதியே உன் விழுதான வழு தழுவி.
விதைக்கும் உன் வீச்சின் விதமறிவோம்.இன்னமும்
நாகரீகமாய்த்தான் உன் நாவெரிக்கின்றேன்.
நாம் உலவும் எம் களம் நீ காரும் கணம் விலகு,

காத்திரமாய் உன் கண்ணுக்கும்,மெய்,வாய்,செவிக்கும்,
சேடம் இழுக்கும் உன் நாவிற்கும்,
உபத்திரம் மேலும் மேயவிடாமல்,
பத்திரமாய் நீ உன் பக்தியை,
உறவாடிக் கெடுக்கும் எழுத்தாணி
ராஜ ம(த)ந்திரத்தை உன் மேனி காக்க,
நீ,
மகிந்தாவின் மையத்தில் வேணிக் காக்க,
வேயும் இந்ந மாந்த புத்தியை அங்கு நீ அடைவு வை,
வையத்தில் அதுதான் உன் வசந்தத்தின்
வளை,
உன் வளமான காப்பு,
வசமான வாகை
எல்லாமே,
ஆரியனின் அந்தப்புரத்தில்.
தமிழினம் சாவிரித்த அவன்,
சொந்தப்புரத்தில்,
எதிரியை எகிற எரிப்போம், ஆயின்!
துரோகியை துர்க்கித்து துவம்சிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்