வியாழன், 4 ஜூன், 2009

செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்


திருவாய் மலர்வாய்,
அருவாய் உருவாய்,
மரியா நினைவே,மகிழ்வே உருவே,
தெரியா திறனே,தெளிவாய் உறவே,
குருவாய்,குணவான்,குறியான்,குறையான்,
நிறைவே,நிலையே,வருவாய்,வருவாய்,
வலியாய்,வளமாய்,வலிவே வருவாய்.
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

செழிப்பே நிலைப்பாய்,செறிந்தே சிறப்பாய்,
விழிப்பே,வீர விளைவே,வினையே,நீ விறலாய்,
விரிவாய்,விரிப்பாய்,விதைப்பால்,நெகிழ்ப்பாய்,
சிரிப்பே,சீலனே,சிரத்தால் சிகப்பாய்,சிறத்தால்
ஜெயிப்பாய்,ஆ,ஆ,ஆஆஆஆஆஆஆஆஆ
விதப்பால் மிதப்பாய்,விகத்தால் ஜெகத்தால்,
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.

நிலத்தால் நிறைந்தாய்,நிதந்தான் நிறைந்தாய்,
பலத்தால்,ஆஆஆஆ,
புலத்தால்,ஆஆஆஆ,
வலத்தால்,ஆஆஆஆ,
வளைத்தாய்,ஆஆஆஆ

கலத்தால்,கதைத்தாய்,பகையை புதைத்தாய்,
விதைந்தாய்,விதத்தால்,கலந்தாய் கரத்தால்,
கனித்தாய்,இனித்தாய்,பனியாய் பரந்தாய்,
ஆஆஆஆஆஆஆஆஆஆ
கனவே,எங்கள் கனவை,
களத்தால் கனித்தாய்,ஆஆஆஆஆஆஆஆஆ
கரைத்தாய்,கலைத்தாய்,கனிவாய் கனிந்தாய்.

பகைப் புலத்தால்,கதை விரித்தாய்,
நுகை நுளைந்தாய் நூதல் விளிப்பாய்,
நகைப்பாய்,நாளை வருவாய்,ஒளியே,எங்கள் விழியே,
திசை திசைத்தாய்,இசை இழைப்பாய்,ஓசை ஒலிப்பாய்.
விசையும் திசையில் இசைவும் இயங்க,
கருவும் சுமந்த கலயம் கலைய,
மருவும் உணர்வில் மாசு கலைய,
வீசும் தென்றலாய்,வீணை விதப்பால்,
வருவாய்,வருவாய்,திருவாய் திறனாய்,
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.

உறங்கும் மா வீரம் வரைய,
மனதில் மருவும் ஈழம் வரைய,
அறங்கள் காத்த அகங்கள் அணைக்க,
அவர்கள் நெஞ்சில் நெகிழ்வு நெகிழ,
மறவர் அவர்கள் மானம் சொரிய,
வருவாய்,வருவாய்,திருவாய் மலர்வாய்,
திறனே எங்கள் அறனே,
வீரனே,
ஈகனே,
தேசனே,
தேவனே
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்