ஞாயிறு, 31 மே, 2009
மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
யார் இந்த மனிதம்?
ஏன் இந்த தவம்?எவர்க்காக இவர் யாக்கும் யாசகம்?
இவரிற்கும்,தமிழனிற்கும் பூத்திருக்கும்
உறவு யாது?
தன் உயிர் வருத்தி,
இவ் லண்டன் மாநகர் வீதியில்,
உணவு,உடல் இயங்கல் நோற்றும் நீர்,
அத்தனையும் துறந்து இவன் ஆற்றும் யாகம்.
இத்தனைக்கும்,
வாழ்வாதரங்கள் அத்தனையும் தன்
வசம் வரப் பெற்ற இந்த வெள்ளை இன நண்பன்
நோத்திருக்கும் யாகம்,
யாருக்காக?
இத்தனை அவலம் எம் மண் சூழ்ந்திருக்க,
ஊதுகுழல் ஊனர்களே!
முகாந்திரம் நூற்றும் இந்த வெள்ளையனிற்குள்ள
உணர்வு உனக்குள் உரம் தாழ்ந்ததேனோ?
நீ
என்றுமே உளம் உறுத்தாய்,
இங்குதான் மானிடத்திற்கும்,மாந்தைக்கூட்டமான
உனக்கும் மையம் தரிக்கும் மாந்த நேயம்.
கொலு அகன்றிருக்கும் கோலம்.
இத்தகை மானுடங்கள் வையத்தில்
வாழ்வதனால்தான்.நீ அங்கு???
எங்கள் மண்ணின் வாசம் நோற்றானோ?யானறியேன்.
எங்கள் ஈழமண்ணின் நேசம் துய்த்தானோ யானறியேன்.
எங்கள் தமிழீழ தாகத்தின் வீச்சம் பரிந்திருந்தான் யாம் அறிவோம்.
ஆதலால்தான் இங்கு அறமோங்க அவதாரம் பூண்டுள்ளான்.
அந்த புனிதனிற்கு பூபாளமாய் பூத்திருக்கும்,
மனித நேயவல்லமை அவன் வாசம் சூட எம் அகமான
ஆயிலியங்கள்,
ஆயின்,
பரதேசியான தமிழீழத் துரோகிகளே.
எதுவுமே எங்களின மக்களிற்கு,ஒரு
வாய்ப்பிடி அரிசியேனும்,ஒரு வாய் தண்ணீர்கூட,
நோய்ப்பிடிக்குள் நுகம் தூக்க எந்த மருத்துவமும்
ஆற்றமுடியாத பெரும் போக துரோகிகளே,
உற்ற எங்கள் உறவுகளை இன்னமும் வீச்சாய்,
மரணபயம் ஊட்டி நீ பறிக்கும் பகல் கொள்ளை,
யாவும் யாம் அறிவோம்,ஆயின்
விரைவில் நீ அதன் வீச்சம் ஏற்பாய்.
அதற்குள்!
இன்னமுமா நீ தேர்தலில் வடக்கில்,
வாக்கு யாக்க போகின்றாய்?
போ,போ,
வடக்கு,ஏன் கிழக்கு கூட இன்னமும்,
மடக்கி இன்னும் இடக்கி வீழவில்லை என்பதை,
தெற்கில் தோளேந்தும் துன்மர்கள்,உன்
மார்க்கில் மடலேந்த வீழும் உன் வாழ்வு,
விரைவில்,களமாக்கும்.
அதுவரை போ,போ,
போக்கற்றவனே போர் இன்னமும்,
ஓயவில்லை என்பதை மட்டும்,
மறவாமல் போ.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக