ஞாயிறு, 31 மே, 2009

மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.


யார் இந்த மனிதம்?
ஏன் இந்த தவம்?எவர்க்காக இவர் யாக்கும் யாசகம்?
இவரிற்கும்,தமிழனிற்கும் பூத்திருக்கும்
உறவு யாது?

தன் உயிர் வருத்தி,
இவ் லண்டன் மாநகர் வீதியில்,
உணவு,உடல் இயங்கல் நோற்றும் நீர்,
அத்தனையும் துறந்து இவன் ஆற்றும் யாகம்.

இத்தனைக்கும்,
வாழ்வாதரங்கள் அத்தனையும் தன்
வசம் வரப் பெற்ற இந்த வெள்ளை இன நண்பன்
நோத்திருக்கும் யாகம்,

யாருக்காக?
இத்தனை அவலம் எம் மண் சூழ்ந்திருக்க,
ஊதுகுழல் ஊனர்களே!
முகாந்திரம் நூற்றும் இந்த வெள்ளையனிற்குள்ள
உணர்வு உனக்குள் உரம் தாழ்ந்ததேனோ?

நீ
என்றுமே உளம் உறுத்தாய்,
இங்குதான் மானிடத்திற்கும்,மாந்தைக்கூட்டமான
உனக்கும் மையம் தரிக்கும் மாந்த நேயம்.
கொலு அகன்றிருக்கும் கோலம்.
இத்தகை மானுடங்கள் வையத்தில்
வாழ்வதனால்தான்.நீ அங்கு???

எங்கள் மண்ணின் வாசம் நோற்றானோ?யானறியேன்.
எங்கள் ஈழமண்ணின் நேசம் துய்த்தானோ யானறியேன்.
எங்கள் தமிழீழ தாகத்தின் வீச்சம் பரிந்திருந்தான் யாம் அறிவோம்.
ஆதலால்தான் இங்கு அறமோங்க அவதாரம் பூண்டுள்ளான்.
அந்த புனிதனிற்கு பூபாளமாய் பூத்திருக்கும்,
மனித நேயவல்லமை அவன் வாசம் சூட எம் அகமான
ஆயிலியங்கள்,

ஆயின்,
பரதேசியான தமிழீழத் துரோகிகளே.
எதுவுமே எங்களின மக்களிற்கு,ஒரு
வாய்ப்பிடி அரிசியேனும்,ஒரு வாய் தண்ணீர்கூட,
நோய்ப்பிடிக்குள் நுகம் தூக்க எந்த மருத்துவமும்
ஆற்றமுடியாத பெரும் போக துரோகிகளே,
உற்ற எங்கள் உறவுகளை இன்னமும் வீச்சாய்,
மரணபயம் ஊட்டி நீ பறிக்கும் பகல் கொள்ளை,
யாவும் யாம் அறிவோம்,ஆயின்
விரைவில் நீ அதன் வீச்சம் ஏற்பாய்.

அதற்குள்!
இன்னமுமா நீ தேர்தலில் வடக்கில்,
வாக்கு யாக்க போகின்றாய்?

போ,போ,
வடக்கு,ஏன் கிழக்கு கூட இன்னமும்,
மடக்கி இன்னும் இடக்கி வீழவில்லை என்பதை,
தெற்கில் தோளேந்தும் துன்மர்கள்,உன்
மார்க்கில் மடலேந்த வீழும் உன் வாழ்வு,
விரைவில்,களமாக்கும்.
அதுவரை போ,போ,
போக்கற்றவனே போர் இன்னமும்,
ஓயவில்லை என்பதை மட்டும்,
மறவாமல் போ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்