சபாஸ்,
சரியான தேர்வு,
ராஜீவ் காந்தி விருது,
மகிந்தாவின் மகோன்னத மனித உரிமை மதிப்பிற்கு?
பாரதத்தின் பரம்பரை பூர்வீகம்,
பச்சை துரோகத்தின் வாரிய விதைப்புரைப்பு.
பாரின் பதிவுகளில் பாரிய மனிதன்,இவன்
பேர் சுமந்து ஒரு விருது அ(ழி)ளிப்பு,கூட ஓர் விருந்தழிப்பு,
அற்புதம்,
மனிதம் அங்கே மணி மகுடம் சூட்டி,
வலுவீற்றிருக்க.
அனிச்சம் பூ ஆகியதாம் முன்னர்
முடிசூடி,கொற்றம் சூழ,
கொடி திக்கெட்டும் திடகாத்திரமாய் பறக்க,
முச்சங்கத்துடன் முத்தெடுத்து,
கோல முகங்கொள கொலு வீற்ற,
கோமேதக தமிழர் இனம்.
முந்தையர்,
எங்கள் எந்தையர் ஆண்ட தமிழ்க்குடி,
அகண்டம் அகண்டு ஆண்ட,
அச்சமற்ற பாரம்பரை தமிழ்க்குடி.
இந்த தமிழ் இனம் இன்று,
வன்முறையாளரென்றும்,
பயங்கரவாதிகளென்றும்,
வன் பெயர் வலிந்து சூட்டி,
ஸ்ரீலங்காவைச் சிதைமுகமாக்கியதாம்,
ஆரோ? கணிக்கும், காரணம்,
அங்கு தமிழர்க்கு,தேனும்,பாலும் ஆறாய்ச் சுரக்க,
சிங்களம்,
அவர்க்கு,எந்த
தீங்கும் கூட கனவில் நினைக்காத,
கலக்காத அங்கத நாட்டு ஆரியம்,
அகமாய் தமிழருடன்,சிங்களமும் சிறப்பாய்,
சீராட்டி,சிகை முகைந்து.
ஆங்கு நிலை எங்குமற்ற அறம்
ஆற்றி தளைத்திருந்ததாம்,
தமிழன்,
தரமற்று,தரணியெங்கும் தாவி,
பயங்கரவாத தளமெடுத்து,
சிங்கள தீவில்,
சிதில முகமமைத்து,சிங்கள முகம் கரைத்து,
அமைதியின் அகம் அகற்றியதாம்,
தமிழ்ப்புலிப் பயங்கரவாதம்,
அதை,
மகிந்தா மதியூக முகங்கொண்டு,
எங்கள் இனவிடுதலையின் முகாந்திர முகமெல்லாம்,
முற்றாக முகமழித்து முன்மாதிரியாக இகத்தில்,
தேற்றம் பெற்ற தோற்றமாக வன்முறை தகர்த்த,
ஏற்றம் உற்ற இராணுவமாக,
தன்னை உலகில் உதாரண புருசர்களாக,
அரிதாரம் பூசியதாம்.
அற்றதையெல்லாம் அழித்ததால்,
அகம் செழிக்க, ஆரிய,பயங்கரவாதியின்,
அரியணைக்கு இந்தியாவின் தேசியப் புதல்வன்,மாஜி
பயங்கரவாதி ராஜீவின் ராசியான விருதாம்,
சபாஸ் சரியான தேர்வு.
வாழ்க வையகத்தில்
நேசமிகு ஜனநாயகம்
வெள்ளி, 22 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக