வெள்ளி, 22 மே, 2009

சபாஸ் சரியான தேர்வு.

சபாஸ்,
சரியான தேர்வு,
ராஜீவ் காந்தி விருது,
மகிந்தாவின் மகோன்னத மனித உரிமை மதிப்பிற்கு?
பாரதத்தின் பரம்பரை பூர்வீகம்,
பச்சை துரோகத்தின் வாரிய விதைப்புரைப்பு.

பாரின் பதிவுகளில் பாரிய மனிதன்,இவன்
பேர் சுமந்து ஒரு விருது அ(ழி)ளிப்பு,கூட ஓர் விருந்தழிப்பு,
அற்புதம்,
மனிதம் அங்கே மணி மகுடம் சூட்டி,
வலுவீற்றிருக்க.

அனிச்சம் பூ ஆகியதாம் முன்னர்
முடிசூடி,கொற்றம் சூழ,
கொடி திக்கெட்டும் திடகாத்திரமாய் பறக்க,
முச்சங்கத்துடன் முத்தெடுத்து,
கோல முகங்கொள கொலு வீற்ற,
கோமேதக தமிழர் இனம்.
முந்தையர்,
எங்கள் எந்தையர் ஆண்ட தமிழ்க்குடி,
அகண்டம் அகண்டு ஆண்ட,
அச்சமற்ற பாரம்பரை தமிழ்க்குடி.

இந்த தமிழ் இனம் இன்று,
வன்முறையாளரென்றும்,
பயங்கரவாதிகளென்றும்,
வன் பெயர் வலிந்து சூட்டி,
ஸ்ரீலங்காவைச் சிதைமுகமாக்கியதாம்,
ஆரோ? கணிக்கும், காரணம்,

அங்கு தமிழர்க்கு,தேனும்,பாலும் ஆறாய்ச் சுரக்க,
சிங்களம்,
அவர்க்கு,எந்த
தீங்கும் கூட கனவில் நினைக்காத,
கலக்காத அங்கத நாட்டு ஆரியம்,
அகமாய் தமிழருடன்,சிங்களமும் சிறப்பாய்,
சீராட்டி,சிகை முகைந்து.
ஆங்கு நிலை எங்குமற்ற அறம்
ஆற்றி தளைத்திருந்ததாம்,

தமிழன்,
தரமற்று,தரணியெங்கும் தாவி,
பயங்கரவாத தளமெடுத்து,
சிங்கள தீவில்,
சிதில முகமமைத்து,சிங்கள முகம் கரைத்து,
அமைதியின் அகம் அகற்றியதாம்,
தமிழ்ப்புலிப் பயங்கரவாதம்,

அதை,
மகிந்தா மதியூக முகங்கொண்டு,
எங்கள் இனவிடுதலையின் முகாந்திர முகமெல்லாம்,
முற்றாக முகமழித்து முன்மாதிரியாக இகத்தில்,
தேற்றம் பெற்ற தோற்றமாக வன்முறை தகர்த்த,
ஏற்றம் உற்ற இராணுவமாக,
தன்னை உலகில் உதாரண புருசர்களாக,
அரிதாரம் பூசியதாம்.
அற்றதையெல்லாம் அழித்ததால்,

அகம் செழிக்க, ஆரிய,பயங்கரவாதியின்,
அரியணைக்கு இந்தியாவின் தேசியப் புதல்வன்,மாஜி
பயங்கரவாதி ராஜீவின் ராசியான விருதாம்,
சபாஸ் சரியான தேர்வு.
வாழ்க வையகத்தில்
நேசமிகு ஜனநாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்