வெள்ளி, 8 மே, 2009

பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்


குருதி உறைந்த தேசம் தங்கள்
உறுதி உழைந்தே உலவுமா?ஊனம்
சொருகி களைந்து உருகுமா?
பருதி உறைந்தே பரவும்,இந்த
மருவும் நிலையே மருவும்.ஈனம்
அருக உயிராய் இயங்கும்.

இரத்தம் ஈயா எந்த போரும்,
இரக்கும் நிலையே சாரும்.
சுரக்கும் இந்த சுயமே ஈழம்,
மரத்தும் மரபாய் மாய்க்கும்.
கருத்துப் போகா காயம் கொண்ட
கனலாய் சீறிக் கீறும்,இது
உளத்தில் என்றும் உறுத்தும் தளைவே
உறுதியாய் களத்தில் தோற்றும்,
கனதி மேவி கடனாய் தீர்க்கும்,

இந்த,
உரத்தை எங்கும் ஊனமூட்டா,
கனத்தல் என்றும் வேண்டும்,கரி
காலன் இயக்கும் காலம் என்றே,
கருவில் சுமக்க வேண்டும்.இந்த
பரத்தில் உரக்க வேண்டும்.

வீரியப் பேறு கொண்டே வீரன்
இறுக்கும் களமாய் விரியும்,
இந்த,
ஆரியத்தின் இறுதி மூச்சை அழிக்கும்,
பாரிய களமே திறக்கும்,
பார்!
இந்த விஸ்வரூபம் கொளவே வீரியன்
விரித்த வலையில் வீழும்,
பகையோ!
விதையும் நிலையே யாக்கும் இனி
பிரபாகரமது ஆற்றும்,பிரம்ம
சூத்திரம் சூட்டிய புலிகள்,
தீயாய் பகையை தீய்க்கும்.

சாலச் சிறக்கும் ஞாலம் இதனை
யாக்கும் காலம் கண்ணில்,
ஆத்ம காலம்
சுரக்கும் சாரம் தாக சன்னதி
வந்தே தேற்றும்.

பரக்க ஈழம் தேய்க்க வந்த ஈன
ஆரியம் அகலும்,பாரே
இறுகப் பற்றும் ஞானம் விதைந்தே
ஈழ முற்றம் சிலிர்க்கும்..
தமிழ் ஈழம் சிறப்பாய் சிலிர்க்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்