வியாழன், 7 மே, 2009

உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்


செல்வி ஜெயலலிதா.
பொதுச் செயலாளர்
தலைமையகம்,
அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக்க கழகம்
சென்னை,

புலம் பெயர் தமிழீழத் தமிழர்கள்.
சுட்காட்,
ஜேர்மனி,
07.05.2009

அதி மேன்மைக்குரிய செல்வி ஜெயலலிதா அவர்கட்கு!
புலம் பெயர்ந்து தற்போது ஜேர்மன் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழனாகிய நாங்கள்,
தங்களின் தாய்மை பொங்கும் உரையினால்,
நிச்சயமாக இந்த துயரஅவலத்தின் மத்தியிலும் துயருறும் எங்கள் ஈழத்தமிழர்களிற்காக,மிகவும் பொறுப்புடனும்,ஜீவகாருண்யத்தின் பிரதிபலிப்பாகவும்,தங்களின் ஆழ் மனதில் ஊற்றெடுத்து,ஊனப்பட்டிருக்கும் எங்கள் மக்களிற்கான உங்கள் தார்மீகக்குரல் ஓங்கி அடிநாதமாக ஒலித்து,
தாய்நிலத்திலும்,புலம்பெயர்ந்து வாழும் எங்களின் இன்னல்களிற்கு ஓர் ஆத்மார்த்த ஓர் ஆறுதலை எங்களகம், ஆழமாக தழுவி, இத்துணை பெருந்துயர் மத்தியிலும் எந்த வார்த்தைகளிற்கும் அப்பாற்பட்ட ஆதங்கத்தை எமக்குள் ஊடுருவி ஆயாசம் உரைத்து ஆரத் தழுவி நிற்கின்றது.
ஆழ்மனமோ இன்னமும் மேலதிகமான உங்கள் செயற்பாட்டை ஏகமாவே ஏந்தி நிற்கின்றது என்றால் அது மிகையாகாது.

நிலை அறிந்து ஆற்றும் இந்த மெத்தபெரிய உதவி உங்களகமாக விரைவில் அரங்கேறும் என்பதான ஆத்ம எதிர்பார்ப்புக்களுடன்,
உங்களையும் உங்கள் சார் இதயகட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்,தற்போது நடைபெறும் தேர்தலில் நிச்சயமாக மிகப் பெருவெற்றியீட்டி மத்தியில் உங்கள் இரட்டை இலை இலைச்சினையின் தார்மீக ஆதரவுடன் அரசோச்சும் இந்த ஆத்மார்த் காட்சி விரைவில் அரங்கேறும்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழீழத்தமிழர்களின் ஏகோபித்த வாழ்த்துக்களும்,
எங்கள் தொப்பிள் கொடி உறவாம் தாய்த்தமிழகத்து உறவுகளின் ஒருமித்த ஆதரவுகளும் உங்களிற்கு இந்த பெருவெற்றியை ஈட்டித்தரும்.
இது வெறும் எதிர்பார்ப்பல்ல.யதார்த்தம் சுட்டி நிற்கும் தார்மீகம்.

உங்களக மென்மையான,வியாபித்த வார்த்தைகள்,என்றும் ஈழத்தை ஜெபிக்கும் ஒவ்வொரு புலம் பெயர் மக்கள் எண்ணத்திலும்,தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும்,எல்லாவற்றையும் மேவி தாயகத்தில் இடர்படும் தமிழர் மனதிலும் உங்களின் இந்த உரையே தாரகமந்திரமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

ஆகவே ஒட்டு மொத்த தமிழர்களது ஆத்மீக ஆதரவும்,ஆசியும் உங்களை செம்மையாகவே இத் தேர்தலில் அளப்பெரிய வெற்றியை உங்கள் கைகளில் அள்ளித் தரும்.எங்களது இதயக்கனியாம் புரட்சித் தலைவரின் பாசறையில் இருந்து,அவரது கொள்கையில் பெரும் பற்றுக்கொண்டு,ஈகையாக நீங்கள் முன்னெடுக்கும் புரட்சிகரமான,உறுதியான,செயற்பாடுகள் வலிமையான,வாகைகொள,புலம் பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்களாகிய ஜேர்மன் வாழ் தமிழர்கள் தங்கள் கரங்களை மிகவும் ஆழமாக பற்றி வாழ்த்துகின்றோம்.

நீங்கள் எவ்வளவு கொள்கைப்பற்றில் உறுதி கொண்டுள்ளீர்களோ,அதேபோல் இழைந்த வார்த்தைகளை உறுதியாக கடைப்பிடித்து அரங்கேற்றும் வலிமை உள்ளவராகவே நாம் கூட கடந்த காலங்களில் உங்கள் செயற்பாடாக அனுபவித்துள்ளோம்,எனவே உங்களின் வாக்குத் தவறாவலிமை வலிமையாக எம் வாசல் வரும்.இந்த நம்பிக்கையின் ஆழத்தில் நாம் அச்சமின்றி எமை உறுதிப்படுத்தி வாழ்கின்றோம்.

தமிழகத்தின் பெரும் புரட்சித் தலைவியே!
நீங்கள் ஆத்மார்த்தமாக ஆற்றவிருக்கும் இந்த அரிய பெரும் சேவையினால் உலகத்தமிழர்களின் மத்தியில் அழியாப் புகழுடனும்,தமிழர் பெருந்துயராற்றிய பெருஞ் செல்வி எனும் வாக்குத் தவறா வலிமைகொள் பெண்ணினத்தின் பெருந்தகையாக வரலாற்றில் என்றும் வசந்தமாக வாழ்வீர்கள் எனும் பெரும் பேற்றின் மூலமாக நீங்கள் திகழ எங்கள் ஆக்ஞையை உங்கள் வசமாக்கி வரும் வசந்தத்திற்காக காத்திருக்கும்,

இன்னல்களில் வாழ்ந்து,இம்சையில் நொந்து,எங்கள் வம்சம் இழந்து,வளம்,வாரிசு,இன்னபிற இழக்கக்கூடாதொலாம் இழந்து,வலிமை மட்டும் இழக்காத,உளவுரணை தக்கவைத்து,உவகை இனியாவது எங்கள் இனமாக்கட்டும் என்றதான வகை எம் வாகைசூட,பூச்சூடும் உங்கள் புன்னகையிலான மென்னகை எங்கள் வளம் வார்க்க பார்த்து பவ்வியமாக,

இத்துடன் இத்தணை எதிர்பார்ப்புக்ளுடனும்,மீண்டும் வாழ்த்துக்கள் உங்கள் வசமாக்கி
பூக்கும் ஈழம் எனபதான பூரிப்பு அக மேக,

நட்பாற்றும் நன்றியுடன்,
ஜேர்மன்,
சுட்காட் வாழ் ஈழ நேசிப்பு யாக நெஞ்சங்கள்.

மீண்டும் உங்கள் கட்சியின் வெற்றிக்கான வாழ்த்துக்களுடன் தொடர விழையும்,
வாஞ்சையாற்றும் நெஞ்சகங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்