ஞாயிறு, 31 மே, 2009

எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.


கல்வியின் காத தூரம்தான் காடையன் சிங்களவனின்,
கர்மாந்திரம்,இந்த நிலை கலவவே நூலகத்தில் நுனிமோந்தது அக்னி,
எங்ஙனம் இந்த ஓர்மம் அங்ஙனம் அகம் பூண்டது,?
இங்ஙனம் ஓர் வினா இங்கு கால் பதிப்பது மிகவும் ஆழமாக அலசப்படுவது முகாந்திர கொள்கின்றது.

தமிழர்களின் முழுப்பலமே அவன் மேற்கோளாக்கும் கல்விதான்.
சிங்களவனின் தனி நுகர்வே அவன் கால் கோளும் கலவியில்தான்.
இங்குதான் தமிழன் முழுமை பெற்றான்,எனில் சிங்களவன் அங்குதான் தரமற்றான்,

முன்பொரு காலத்தில் இரு நாடு ஒரு தீவு,
இது வரலாறு மோந்தது நிற்கும் உண்மை,
அந்த தமிழரசர்கள் தரமாண்ட காலத்தில்,இனவிகிதாசாரம்,
வலிமையாய் ஏறக்குறைய சமமானதாகவே மையம் கொண்டது,
பின்பு போர்த்துக்கீசர்,ஒல்லாந்தர்,பிரித்தானியர்,
இப்படி வெள்ளையர்களின் வருகை அங்கு வலம் கொண்டு,அவலம் வீற்ற, ஆளுமையானது அதன் பின்னாலான பின்னல்,

இனப்பிரிப்பு,இனவழிப்பு,காக்கை வன்னியனின் பெருந்த கயமையான இன்று போலவே அன்றுமான அலங்கோலம்,ஊது குழலான,ஒட்டுக்குழலின் ஆர்த்தநாரீசம்.
சங்கிலி மன்னனின் அதி வீரம் தோல்வி களமாக,
அங்குமட்டும் என்ன நடந்தது? இன்றுபோல் எல்லாமே காக்கை வன்னிக்கூட்டத்தின் எட்டப்ப தகமைதான்,வேறென்ன.?இதனால் அழிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது,தமிழன் தன் இருப்பை வலிமைப்படுத்த கண்ட போர்க்களங்கள் ஈழ வரலாற்றில் இன்று வரை தொடரும் துல்லியமான ஓர் தொடர் கதைதான்.

ஒவ்வொரு களமுனைகளிலும் தன் இனத்தாலே அவர் தம் வீரம், ஒட்டுக்குழுக்களால் ஒர் மையப்படுத்தலில் காட்டிக்கொடுக்கப்பட்டு,எத்தனை வீரமறவர்கள் அவர் தம் சந்ததியூடாகவே முற்று முழுதாக அழித்தொழிக்ப்பட்டார்கள்.ஈழத்தில் தமிழர் சமூகம் இனவிகிதாசாரத்தில் கனதி குறைக்கப்பட்ட களமும் இதுதான்,இன்று போல் இலட்சக்கணக்காக எங்கள் தங்கக உறவுகள் அழிக்கப்பட்ட வரலாறு சாற்றி துயர் தோய்ந்து நிற்கும் சாரம்.

இரு அரசுகளின் அடிமைத்தனத்தை அரங்கமாக்க ஆற்றுப்படுத்தப்பட்ட
அரசாங்கத்தின்நிர்மாணத்திற்காகஒரேஅவதானத்தின்கீழ்ஒருங்கமைக்கப்பட்ட ராஜதந்திர நகர்வில் எல்லாமே எல்லாள வசம் இழந்து,மனிதநாகரீகம் அங்கலாய்க்கப்பட்டு,மதமாற்றம்,மொழிஆளுமை,வெள்ளையர் சேவகம்,இப்படி எல்லாவிதத்திலும் தமிழன் தரமற்று வால்பிடித்து தன் சுயநலங்களிற்காக தமிழினத்தை விற்கத்தொடங்கிய போதிலும் அவனின் கல்வியே களம் அமைத்து நின்றது.

சிங்களவன் தன்வாழ்வில் சிரமமாக கைக்கொண்ட சிறந்தமார்க்கம் இனவிருத்தி,அதனால் ஆரியன் மேற்கொண்ட பாரிய குடியேற்றம்,ஒவ்வொரு முறையும் தமிழன் எண்ணிலடங்காமல் அழிக்கப்பட்ட போதெல்லாம் சிங்களம் தன் இனத்தை வீரியமாகவே இனப்பெருக்கி இடம் அடைத்தான்.எங்கள் தமிழ் நிலம் அபகரித்து இனவழிப்பில் தோய்ந்து நிற்கின்றான்.இது சிங்கள வம்சத்தில் கால,காலமாக ஆரிய குருதியில் குடி கொண்டுள்ளது.

தமிழர் அவர்தம் வாழ் நிலங்களை அபகரித்ததன் மூலமும்,எந்த சனநடமாட்டம் இல்லாத ஆனால் எதிர்கால போக்குவரத்துக்கள் நடைபெறப்போகும் பிரதானசாலைகளின் காட்டுப் பகுதிகளிலும் சிங்களவன் குடியேறி வாழ அதற்கு சிங்கள அரசும் உத்வேகம் அளித்து தார்மீக உதவிகளையும் செய்தது.உதாரணமாக பார்த்தீர்களேயானால் யாழ் கொழும்பு பிரதான வீதிகளின் காட்டுப் பகுதியை மையம் வைத்து பாரிய சிங்கள குடும்பங்கள் வாழந்ததனை அடிக்கடி இந்த வீதியால் பிரயாணம் செய்தவர்கள் அவதானித்திருந்தால் புரியும்,அதுசரி எங்கே வாகனத்தில் மூலை இருக்கையை கைப்பற்றியவுடன் கொண்டு வந்த சோமபானங்களை சொடுக்கிவிட்டு சுகமான துயில் கொண்டு, ஜீவித பிரயாணம் செய்தோர் எவருமே இதை எப்போதுமே கருத்தில் அதாவது கவனத்தில் கொண்டிருக்க சாத்தியம் அறவே இல்லை. அப்படி கண்ணுற்றோர் கருக்கொண்ட யதார்த்தம் யாதெனில் பாவம் சிங்களவன் என்பதே தவிர இதன் எதிர்காலத் தாக்கத்தை யாருமே கருக்கொள்ளவில்லை.

தமிழரோ தன் சுயநலத்திற்காகவும்,தன் பரம்பரையின் விரிவாக்கத்திற்காகவும் எந்த ஒரு தொலைநோக்கையும் தன் கல்விமூலம் நடைமுறைப்படுத்தாதன் பின் விளைவு இன்று நாம் அகதியான புலப்பெயர்வு,

நிற்க,
மேலும் சீரான குடும்பக் கட்டுப்பாடு,இதை வாசிக்கும் அல்லது கருத்தில் எடுக்கும் வாசகர்களே 1972லே அரசாங்கம் முன் வைத்த குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரத்திற்கு சோரம் போனவர்கள் அதிகமாக தமிழர்கள் என்பதை நிலையில்,நினைவில் கொள்க.

இப்படி விலைபோன தமிழர்களின் கல்வியில் கை வைக்க முடியாத இந்த இனவாதிகள் தமிழர்களின் கல்வியில் கை வைப்பதாக எண்ணியே எங்களின் கல்வியின் மூலதனமான,ஆதாரமான எண்ணிக்கையற்ற பல சுவடிகளையும்,ஆதர்சனங்களையும் தாங்கி நின்ற எங்களின் கற்பகதருவான யாழ் நூலகத்தை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கல்வியின் புறநிலைகளையும் சேர்த்து அழிக்கலாம் என பகல் கனவை கண்டனர். ஏனெனில் இவர்களின் மோட்டு சிங்கள மூளைக்குள் சிரம் கொண்டது இந்த அழிவுகளின் ஆர்ப்பே முகாந்திரம் முனைந்திருந்துது.இன அழிப்பில் சிங்களம் எமது எத்தனை கல்விமான்களை அழித்திருக்கின்றது என்பது மிகவும் வேதனைக்குரியது.

1977ல் நடைமுறையாக்கப்பட்ட பல்கலைக்கழக தராதரம் உற்றுத்தரும் பாடம்,1981ல் நூல்நிலையம் எரிக்கப்பட்ட மூலகாரணம்,1983ல் கொழும்பில் ஏற்படுத்தப்பட்ட இனவழிப்பில் எத்தனை கல்விமான்கள் அழிக்கப்பட்டார்கள்,மேலும் எத்தனை அறிவு ஜீவிகள்,கல்விப் பெருந்தகைகள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்,அல்லது வெளியேறவேண்டிய புறநிலைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.1987,1989களில் யாழ் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட மருத்துவர்களின் கொலைகள் கூறும் பாடம் என்ன,?இன்று இந்த பாரிய இனவழிப்பு வன்னியில் அரங்கேற்றப்பட்டபோது அங்கு கடமையாற்றிய மருத்துவர்களின் எதிர்காலம் கூறப்போகும் மூலம் என்ன?

இழப்புகளிற்கு உட்பட்டவர்களின் சொந்தங்களிற்குதான் புரியும் அவர்கள் எத்தனை கல்விமான்களை இந்த வன்னியில் இழந்திருக்கின்றார்கள் என்பது,இற்றைக்கு 61 ஆண்டுகளிற்கு முன் நடைபெற்ற கல்விமான்களின் அழிப்பு இதில் விபரம் கொள்ளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆக மொத்தத்ததில் தமிழின இனவழிப்புடன் சேர்த்து எங்களின் கல்விமானகள் பலரையும் ஸ்ரீலங்காவின் காடைய இராணுவ வல்லூறுகள் வேரோடு மண்ணாய் துடைத்தழித்துள்ளானர். இந்த துட்டன் மகிந்தா இவனிற்கும்,இவனின் சகோதரனிற்கும் தமிழீழ தமிழர்களை பூண்டோடு அழித்ததற்காக இன்று ஏதோ கலாநிதிபட்டமளிப்பு விழாவாம்.விந்தையான உலகம் இது.

எத்தனை இடர்களிற்கு மத்தியிலும் தமிழினம் கல்வியில் என்றுமே காத்திரமாக முன்னேற்றத்தையே முகாந்திரம் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது,தேசியத் தலைவன்,எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தமிழரின் கல்வி வளத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பது அவரின் ஆளுமைகள் சுட்டி நிற்கும் தொலைதூரப்பார்வை என்றால் அதுவும் மிகையாகாது.

ஆக, மொத்தத்தில்,இன்னமும் சொல்லப்போனால் சிங்களவனின் ஆட்சிக் கட்டிலில் அவனிற்கு ஆளுமையின் முகாந்திரத்தை அமைத்து கொடுத்தவனும் சோரம் போன சோமாரியான,கோடரிக்கொம்புகளான, சில தமிழ் அறிவு ஜீவிகள் என்பதும் வலிதரும் உண்மைதான்,

எனவேதான் இன்னமும் இந்த இனவாதிகள் தமிழரின் கல்வியில் காத்திரமான கண் வைத்து எங்களின் அறிவுசார் இயக்கங்களையும்,இனமான ஒற்றுமையையும் இன்றும் சதிமூலம் சரிக்க ஓர் தீர்மானமாகவே காரியமாற்றுகின்றான். இதை மிகவும் ஆழமாக கனம் செய்யவேண்டிய தேவையை இன்றும் இந்தயாழ் நூலக எரிப்பு கட்டியம் கூறி நிற்கின்றது. என்பதை நாங்கள் சிரமாக வெகு சிரத்தையாக முகம் கொண்டு இன்னமும் எங்களின் இளைய தலைமுறைகளின் கல்வியை தீவிரமாக மேற்கொள்ள புலம் பெயர் பெற்றோர்கள் இந்த பாரிய வினையை ஆற்றவேண்டும்.

எதிரியானவன் இந்த கொடும் போர்முனையில் இருந்து மீண்டு வந்த எந்த தமிழ் சிறுவர்களின் எதிர்காலத்தில் எந்த சிரத்தையையும் கொள்ளமாட்டான்,என்றோ ஒருநாள் அது சாத்தியமானால் வெளிவரும் எங்களின் இந்த சிறார்களின் கல்வியையும்,அவர்தம் எதிர்காலத்தையும் புலம் பெயர் உறவுகளாகிய நாம் பெரும் சிரத்தையுடன் அவர்களின் எதிர்காலத்தை எங்களின் பிள்ளைகளாகவே அகமாக ஏற்று இந்த தேசத்தேவையை ஆளுமை கொள்ளவேண்டும். எனவே இந்த பாரிய பொறுப்பை நாம் மிகவும் காத்திரமாக முன்னெடுக்க முகாந்திரம் அமைக்க புத்தி ஜீவிகளின் பாரிய உதவிகளை நாம் பூரணமாகவே எதிர்பார்த்துள்ளோம்.

இதுவே தமிழுணர்வுள்ளவர்களின் அளப்பரிய எதிர்பார்ப்பாகும்.
ஆற்றுவார்களா?இந்த பாரிய பணிமுன்னெடுப்பை எம் தேசிய புத்தி ஜீவிகள்.அழிக்கப்பட்ட,எரிக்கப்பட்ட எங்கள் யாழ் நூலக நினைவு நாளான இன்று இது பற்றி ஓர் திடமான ஒளியூடாக,இந்த நேரிய பணியை முன்னோக்கி புலம் பெயர் சமூகம் ஆழமான செயலாற்ற வேண்டிய காலக் கடமையை கரம் கொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்