காத்திருக்கும் காலம் என்று பூத்திருக்குமோ?
காணும் காலவடுவாக நீண்டு மாய்திருக்குமோ?
ஈத்திருக்கும் ஈழம் என்று இகமியங்குமோ?ஊன
பாயெரித்து ஊதல் எல்லாம் உளமியங்குமோ?
எங்கள் மனமியங்குமோ?
ஊரெரித்து பகையும் உலவும்,
உடலெரிந்து உறவும் உறையும்,
பாரெடுத்து சோகம் சொல்ல பாதை விரியுமே,
இந்த நோவுரைக்க நேயம் கொள்ள மனம்
இயங்குமே,உலரும் மனம் இயங்குமே.
தாகம் தீர்க்க தண்ணீரில்லை,
பசித்திருக்க உணவும் இல்லை,
பாலுக்கழும் பாலர் முகங்கள்,
பார்த்திருக்குமா?இந்த பார் முழுதும்
உறவிருந்தும் பால் சுரக்குமா?
பாவி அவன் போர்க்கலங்கள்,
பதை,வதைத்து உயிர் விழுங்கும்.
மேவி,
ஆவிதாவி வன்னி மண்ணில் மேய்ச்சல் பூணுதே,
காவி உயிர்களெல்லாம் கந்தகத்தில்
கரை ஒதுங்குதே.
எரிகலங்கள் ஆகும் அந்த வெண்ணிறக் குண்டு,
பெரிக்கி, உடல் உருக்கி கருக்கும் கந்தகங் கொண்டு.
வீசிப் பகை வீதியெல்லாம் சாவிரிக்குதே,
ஊசி உடல்கள் எல்லாம் உதவியின்றி நரகலாகுதே,
ஈசி,
கிருமி,மூசி ஈழமெல்லாம் கரைசலாகுதே.
வேர்த்திருக்கும் காலம் இல்லை,
வேங்கை களம் ஓய்வதில்லை,
பார்த்திருக்கும் நேரமில்லை,களம்
இறங்குவோம்,சர்வ களமியங்குவோம்.
இன அழிப்பை ஈவின்றி ஈனன் ஆற்றுவான்,இனம்
சுரந்தியங்கும் ஈழவேட்கை அழித்திருப்பானா?
மானம் காக்க புலிகள் எல்லை மீண்டும் ஏகுவார்,பார்
வானமே எல்லை என்று வாகை முழங்கி வெல்லுவார்,
ஈழம் இகத்தில் ஈற்றுவார்.
வெள்ளி, 15 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2020
(1)
- ► செப்டம்பர் (1)
-
►
2012
(18)
- ► செப்டம்பர் (1)
-
▼
2009
(207)
- ► செப்டம்பர் (8)
-
▼
மே
(33)
- மனித நேயம் எங்கும் ஓர் மூலையில் ஓர்மமாற்றும்.
- எரிந்த நூலகமும்,எதிர்கால கல்வி தராதரமும்.
- வயல் விரிய வகிடெடுப்போம்.
- உருக்கொள்வோம் ஊரறிய வலம் வருவோம்.</
- பகையின் பாகை தறிக்க பரவலாய் எரிய.
- வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?
- வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.
- சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.
- ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.
- சபாஸ் சரியான தேர்வு.
- விஞ்சி நின்ற வீரம் இனியும் களமேகும்
- தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்
- பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.
- ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
- ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்
- கேணல் சூசை,அரசியல் பொறுப்பாளர் தயாமோகன்,சமகாலச் கள...
- யார் கரங்களில் இறுதிக் களம்?
- வலுவிருக்க வலுக்கொள்ளு.
- ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????
- ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே
- அகிலத்தில் அங்க விற்பனை முகவர்
- திசையெல்லாம் தீயாய் எழு.
- ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெ...
- TR_Song
- திரை மூடிய உரை உரத்தது.
- பிரம்ம ஞாலம் பிறக்கும் ஈழம்
- இறுதி யுத்தம்
- ஈழதேசம்.கொம் - panadesan peeddi
- உலகத் தமிழினம் யாசிக்கும் தமிழ்த் தேசியம்
- வேதினியில் வேகாத வெங்களம்
- எரியுண்ட எங்கள் ஈழ நிலவர் மேல்
- வித்தகர் மேதினியில் ஓர் சத்தியம்.
- நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக